ஷீனாவின் செல்போனை அவர் இறந்த பின் ஒரு வருடமாக பயன்படுத்திய இந்திராணி
மும்பை: மகள் ஷீனா போராவைக் கொலை செய்த பின்னர், அவரது செல்போனை கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்குப் பயன்படுத்தி வந்துள்ளார் இந்திராணி முகர்ஜி என்று போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.
மேலும் தனது மகள் உயிருடன் இருப்பதைப் போல காட்டிக் கொள்வதற்காக அந்த செல்போனிலிருந்து எம்.எஸ்.எஸ், மெயில் போன்றவற்றையும் அவர் ஷீனா பெயரில் அனுப்பியும் வந்திருக்கிறார்.
மிக மிகத் திட்டமிட்டு புத்திசாலித்தனமாக பல்வேறு அலிபிகளை உருவாக்கி, யாருக்குமே சந்தேகம் வராத அளவுக்கு தெளிவாக நடந்து வந்துள்ளார் இந்திராணி என்றும் போலீஸார் கூறுகிறார்கள்.

எட்டு மணி நேர விசாரணை
இந்திராணியை நேற்று போலீஸார் 8 மணி நேரம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அதன் பின்னர் போலீஸா கமிஷனர் ராகேஷ் மரியா, செய்தியார்களிடம் விசாரணை குறித்த பல தகவல்களைத் தெரிவித்தார்.

ஆள் மாறாட்டம்
ராகேஷ் மரியா கூறுகையில், ஷீனாவைக் கொலை செய்த பின்னர், ஷீனா உயிருடன் இருப்பதாக காட்டிக் கொள்ள பல்வேறு ஆள்மாறாட்ட வேலைகளைச் செய்து வந்துள்ளார் இந்திராணி.

அமெரிக்காவில் வாழ்வதாக நம்ப வைத்தார்
தனது மகள் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டது போலவும், அங்கு வாழ்ந்து வருவது போலவும் பிறரை நம்ப வைப்பதற்காக பல காரியங்களை அவர் செய்துள்ளார்.

பீட்டர் மகனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார்
தனது மகள் ஷீனா காதலித்து வந்த பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவியின் மகனான ராகுல் முகர்ஜிக்கு அவர் ஷீனாவின் செல்போனிலிருந்து இனி நாம் சேர முடியாது. பிரிந்து விடுவோம். என்னை மறந்து விடு என்று அவர் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.

2 எஸ்.எம்.எஸ்.
போலீஸாரிடம் ராகுல் முகர்ஜி தெரிவிக்கையில் 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஷீனாவின் செல்போனிலிருந்து 2 மெசேஜ் வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் ஷீனா கொலை செய்யப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை இந்திராணிதான் ஷீனா பெயரில் அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.

ராகுல் மீது பொய்ப் புகார்
மேலும் ஷீனாவைக் கொலை செய்த பின்னர் ராகுல் தன்னை துரத்துவதாகவும், அதற்குப் பயந்தே ஷீனா அமெரிக்கா போய் விட்டதாகவும் அப்போது போலீஸில் பொய்யான புகார் ஒன்றையும் கொடுத்திருந்தார் இந்திராணி. அது தற்போது பொய்ப் புகார் எனத் தெரிய வந்துள்ளது.

அத்தோடு நிற்காத இந்திராணி
இந்திராணி அத்தோடு நிற்கவில்லை. ராகுலும், ஷீனாவும் வசித்து வந்த வீட்டின் உரிமையாளருக்கு வீட்டு வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்வது போல ஷீனா பெயரில் தகவல் அனுப்பியுள்ளார். மேலும் ஷீனா வேலை பார்த்து வந்த நிறுவனத்திற்கும் ஷீனாவின் பெயரில் இவரே ராஜினாமா கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.

கொன்றவர் சஞ்சீவ் கன்னா
ஷீனாவை 2012ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை செய்துள்ளனர். இந்திராணியின் முன்னாள் கணவரான சஞ்சீவ் கன்னாதான் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அப்போது காரில் இந்திராணியும், டிரைவர் ஷியாம் ராயும் உடன் இருந்துள்ளனர்.

மும்பை கொண்டு வரப்பட்ட கன்னா
இந்திராணியிடம் மேலும் சில நாட்கள் தீவிர விசாரணை நடைபெறவுள்ளது. தற்போது சஞ்சீவ் கன்னாவையும் போலீஸார் மும்பை கொண்டு வந்து விட்டனர். இந்திராணி முன்பு வைத்து அவரிடமும் விசாரணை நடைபெறவுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications