அப்ப, ஒபாமா நாடு திரும்பிய பிறகு இந்தியா மீது பாக். தாக்குதல் நடத்தலாமா?
டெல்லி: ஒபாமாவின் இந்திய வருகையின் போது மட்டும் எல்லை கடந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபடக் கூடாது என்று பாகிஸ்தானை அமெரிக்கா எச்சரித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அடுத்த வாரம் இந்தியா வருகை தருகிறார் அமெரிக்கா அதிபர் ஒபாமா. இந்த பயணத்தின் போது எந்த ஒரு பயங்கரவாத செயலிலும் பாகிஸ்தான் ஈடுபடக் கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர்கள் இதற்கு முன்னரும் பல முறை வந்து சென்றுள்ளனர். அப்போதும் கூட இது போன்ற எச்சரிக்கைகளை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா விடுத்ததுதான்.. ஆனால் அந்த அதிபர்கள் அமெரிக்கா சென்ற பின்னர் வழக்கம் போல பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை தொடர்வதையே வாடிக்கையாகவும் வைத்திருக்கின்றனர்.
இதுதான் தற்போதும் நடக்கிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ராணுவ உதவி வழங்கும்போதெல்லாம் இந்தியா ஆட்சேபம் தெரிவித்தே வருகிறது. ஆனாலும் அமெரிக்காவின் உதவிகளைப் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்குள் தீவிரவாத செயல்களைத்தான் பாகிஸ்தான் மேற்கொண்டும் வருகிறது.

இந்தியாவுக்கு உரிமை இல்லையா?
அமெரிக்கா தன்னுடைய நலன்களுக்கு எதிரான இயக்கங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த உரிமை இருக்கிறது என்கிற போது இந்தியாவுக்கும் அப்படியான உரிமை உண்டு அல்லவா என்பதுதான் இந்திய பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் எழுப்பும் கேள்வி.

540 யுத்த நிறுத்த மீறல்கள்..
கடந்த 2014ஆம் ஆண்டு மட்டும் 540 யுத்த நிறுத்த மீறல்களை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகபட்சமான யுத்த நிறுத்த மீறல் இதுவாகும்.

கடந்த காலங்களில்
2007ஆம் ஆண்டு 21, 2008-ல் 77, 2009-ல் 28, 2010-ல் 41, 2011-ல் 51 முறை பாகிஸ்தான் யுத்த நிறுத்த மீறல்களை மேற்கொண்டது. 2013ஆம் ஆண்டு 148 யுத்த நிறுத்த மீறல்களே நிகழ்ந்த நிலையில் இந்த எண்ணிக்கை மிக மிக அதிகமாகும். ஆனால் இதுபற்றியெல்லாம் அமெரிக்கா இதுவரை வாயே திறக்காமல் இப்போது ஒபாமா வருகையை ஒட்டி அறிக்கை விடுவது என்பது இந்தியாவை கடுமையாக அதிருப்தி அடைய வைத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு சமிக்ஞை?
அமெரிக்காவின் இந்த இரட்டை நிலைப்பாட்டின் மூலம், ஒபாமா இந்தியாவை விட்டு போன பின்னர் தாக்குதல் நடத்திக் கொள்ளலாம் என்று பாகிஸ்தானுக்கு சமிக்ஞை கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்வியையும் எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications