செருப்பு தைக்கும் தொழிலாளி வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் டெபாசிட்.. நோட்டீஸ் அனுப்பியது ஐ.டி.!
செருப்பு தைக்கும் தொழிலாளி வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகமதாபாத் : வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ததாக கூறி, குஜராத்தை சேர்ந்த காலணி தைக்கும் தொழிலாளிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குஜராத் மாநிலம், சிம்பவடி கிராமத்தை சேர்ந்தவர் மன்சுக் மக்வானா(55). இவர், ஜுனகத் நகரில் உள்ள சாலையோரத்தில் காலணிகள் தைத்துக் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். ஜன்தன் திட்டத்தின் கீழ் இவர் வங்கி கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில், இவரது வங்கிக் கணக்கில் திடீரென்று ரூ.10 லட்சம் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்க கோரி மன்சுக் மக்வானாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு வந்த நோட்டீசை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு பெரிய தொகையை சம்பாதிப்பது என்பது சாத்தியமே கிடையாது. நான் தினமும் கஷ்டப்பட்டு 200 ரூபாய் சம்பாதிக்கிறேன். அதை வைத்துதான் எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன். நான் எப்படி அவ்வளவு பெரிய தொகையை டெபாசிட் செய்ய முடியும் என்றார்.
வங்கி சர்வரில் ஏற்பட்ட குளறுபடியால் இந்த தவறு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்தனர். இதையடுத்து, மக்வானா நிம்மதி அடைந்தார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications