ஜம்மு காஷ்மீரில் பேய் மழை: 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம்; 160 பேர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளத்தில் 160 பேர் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் அங்கு கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரால் 2 ஆயிரத்து 500 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 450 கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

இந்த மழை, வெள்ளத்திற்கு இதுவரை 160 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டார். அவருக்கு ஜம்மு காஷ்மீ்ர் முதல்வர் உமர் அப்துல்லா நிலைமையை விளக்கிக் கூறினார்.
மாநில மக்களின் பாதுகாப்பும், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதும் தான் தனது முக்கிய வேலை என்று உமர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தார்.

ஜம்முவில் மட்டும் 1,000 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 50 பாலங்கள், நூற்றுக்கணக்கான கிமீ அளவில் சாலைகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை ராணுவ வீரர்கள் மீட்டு வருகிறார்கள். ராணுவ வீரர்கள் இதுவரை 7 ஆயிரம் பேரை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 நாட்களில் பெய்த மழையால் ஜம்மு காஷ்மீர் திணறி வரும் நிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அம்மாநில மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications