ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: அரசு வக்கீலுக்கு ரூ.65,000 அபராதம்
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொதுக்குவிப்பு வழக்கில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ரூ. 65,000 அபராதம் விதித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் இறுதி வாதம் கடந்த 7ம் தேதி துவங்க வேண்டியது. ஆனால் அன்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து வழக்கை நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா மார்ச் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன் அன்றைய தினம் பவானி சிங் மருத்துவ சான்றிதழை சமர்பிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த 10ம் தேதியும் பவானி சிங் ஆஜராகவில்லை. ஆனால் அவரது உதவி வழக்கறிஞர் ஆஜராகி மருத்துவ சான்றிதழை சமர்பித்தார். இதையடுத்து நீதிபதி இறுதி வாதத்ததை மார்ச் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன் பவானி சிங்கிற்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் பவானி சிங் இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி ஜான் பவானி சிங்கிற்கு ஒரு நாள் சம்பளமான ரூ.65,000 அபராதம் விதித்தார். மேலும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்தார். வழக்கை தாமகப்படுத்த இவ்வாறு மனு தாக்கல் செய்ததாக அந்நிறுவனத்திற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்த அவர் நாளையும் பவானி சிங் ஆஜராகவில்லை என்றால் மீண்டும் ரூ.65,000 அபராதம் விதிக்கப்படும் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications