ஜெ. சொத்துக்குவிப்பு தீர்ப்பு: கணித கூட்டலில் தப்பு நடந்தது எப்படி?
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவின் வருவாய் மற்றும் சொத்து மதிப்பை ஹைகோர்ட் கணக்கிட்டதில் தவறு உள்ளதாக சிறப்பு வக்கீல் ஆச்சாரியா குற்றச்சாட்டு எழுப்பியுள்ள நிலையில், அதுகுறித்து ஒரு சுருக்கமான பார்வை இதோ:
ஜெயலலிதா தரப்பு மொத்தம் 10 நிறுவனங்களிடமிருந்து ரூ.24 கோடியே 17 லட்சத்து 31 ஆயிரத்து 274 கடன் பெற்றதாகவும், அதில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய கணக்கீடுக்கு பிந்தைய கடன் தொகை ரூ.18 கோடியே, 17 லட்சத்து, 46 ஆயிரம் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதை வருமானமாக கருத வேண்டும் என்றும் நீதிபதி கூறுகிறார். ஆனால், வருமானமாக கருத வேண்டும் என்று நீதிபதியால் கூறப்படும் இந்த தொகை, சரியாக கூட்டப்பட்டால், ரூ.4 கோடியே, 67 லட்சத்து, 46 ஆயிரம் மட்டுமேயாகும்.
இந்த கூட்டலின் அடிப்படையில், ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.34 கோடியே 76 லட்சத்து, 65 ஆயிரத்து 654 என்று நீதிபதி கூறுகிறார். ஆனால், கடன் தொகையை சரியாக கூட்டினால் வரும் தொகையை வைத்து, வருவாய் மதிப்பை கணக்கிட்டால், அது, ரூ.21 கோடியே, 26 லட்சத்து, 65 ஆயிரத்து, 654 மட்டுமே.
எனவே ஜெயலலிதாவிடமுள்ள மொத்த சொத்துக்கள் என்று நீதிபதி குறிப்பிடும் ரூ.37 கோடியே, 59 லட்சத்து, 2ஆயிரத்து 466லிருந்து 21 கோடியே, 26 லட்சத்து, 65 ஆயிரத்து, 654 ரூபாயை கழித்தால், வருமானத்துக்கு அதிகமாக உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.16 கோடியே, 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 வருகிறது.
இந்த சொத்து மதிப்பு, மொத்த வருவாய் மதிப்பில் ரூ.76.75 சதவீதமாகும். ஆனால் தவறான கணக்கீட்டின்படி, சொத்தில் இருந்து வருவாயை கழித்தால்தான் நீதிபதி கூறியதைப்போல வருவாய்க்கு அதிகமான சொத்து மதிப்பு 8.12 சதவீதம் வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications