2ஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் தவறு இருக்கிறது.. நீதிபதி ஓ.பி. சைனி
2ஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் உண்மையில்லை என்று நீதிபதி ஓ.பி. சைனி தனது தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறார்.
டெல்லி: 2ஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் உண்மையில்லை என்று நீதிபதி ஓ.பி. சைனி தனது தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறார். பல சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவில்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
2ஜி வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஓ.பி. சைனி வழங்கிய தீர்ப்பில் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர் அளித்த தீர்ப்பில் "ராசா மீதான எந்த தவறும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. சிபிஐ தரப்பு பல முக்கிய சாட்சியங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரவில்லை'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் '' இதில் குற்றப்பத்திரிக்கை ஜோடிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை. இதுவரை இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பவர்களுக்கு எதிராக மிக முக்கிய ஆதாரம் என்று கூறப்படும் அளவிற்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் முக்கியமாக '' இந்த குற்றப்பத்திரிக்கையில் பொய்யான தகவல்கள் நிறைய கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் காட்டப்பட்டு இருக்கும் கணக்குகளில் எதுவும் சரியாக இல்லை. நுழைவுக்கட்டணம் டிராய் நிறுவனத்தால் மறுஆய்வு செய்யட்டதாக குறிப்பிடப்பட்டு இருப்பது உண்மையில்லை'' என்றும் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications