மொழிப்பற்றை தமிழர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்: கர்நாடக முதல்வர் புகழாரம்
பெங்களூர்: மொழிப்பற்று குறித்து தமிழர்களிடமிருந்து கன்னடர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரில் இன்று கன்னட வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியதாவது:

கன்னட மொழி பற்றி, கன்னடர்கள் அலட்சிய மனப்போக்குடனேயே நடந்துகொண்டு வருகிறார்கள். எனவேதான் இப்போது தாய்மொழி மீது பற்று ஏற்படுத்த அரசு முயற்சி செய்ய வேண்டிய நிலை வந்துள்ளது. கன்னடத்துக்கு தனியாக வளர்ச்சி ஆணையம் அமைத்து மொழி வளர்ச்சிக்கு பாடுபடுகிறோம்.
தாய் மொழியை நேசிப்பதில் நாம் தமிழர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்களது மொழியை உயிரைவிட உயர்வாக நினைப்பார்கள்.
அவர்களை பார்த்து நாமும் நமது தாய் மொழியை எப்படி கவுரவிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். பிற மாநில மக்களும்கூட தாய்மொழிக்கு உயரிய கவுரவம் கொடுக்கிறார்கள். கன்னடத்தை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்த நான் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறேன்.
என்னிடம் வரும் கோப்புகளுக்கு நான் கன்னடத்தில்தான் கையெழுத்திடுகிறேன். ஆங்கிலத்தில் வரும் கோப்புகளை திருப்பியனுப்பிவிடுவேன் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications