ஜெ. வழக்கில் அப்பீல்... 21ம் தேதி முடிவெடுக்கிறது கர்நாடகா?
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அப்பீல் செய்வது தொடர்பாக மே 21ம் தேதி முடிவெடுக்கும் என்று கருதப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கீழ் கோர்ட் விதித்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தனர்.

இந்த அப்பீல் மனுக்களை விசாரித்த நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் அபராதத்தையும் தள்ளுபடி செய்தார். இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
ஆனால் நீதிபதி குமாரசாமி சாதாரண கூட்டல் கழித்தல் பெருக்கலில் செய்த மிகப் பெரிய தவறு அடுத்த நாளே வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது குழப்பமான தீர்ப்பும் பல்லைக் காட்டி விட்டது. தப்புக் கணக்கின் அடிப்படையில் அவர் ஜெயலலிதாவை விடுவித்தது உள்ளங்கை நெல்லிக் கனியாக தெரிந்தது.
இதையடுத்து நீதிபதி குமாரசாமி தீர்ப்புக்கு எதிர்ப்புகள் வலுத்தன. அதிமுக, பாஜகவைத் தவிர அத்தனை கட்சிகளும் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால் கர்நாடக அரசு மிக மிக நிதானமாக செயல்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் அப்பீல் செய்யலாம் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவும் ஓகே சொல்லி விட்டார். இருப்பினும் முடிவெடுக்காமல் உள்ளது. இந்த நிலையில் 21ம் தேதி கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அன்று இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
பதவியேற்புக்கு முன்பு ஜெ.வை. அப்செட்டாக்கத் திட்டம்?
மே 22ம் தேதியன்றுதான் அதி்முக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அன்று புதிய முதல்வராக ஜெயலலிதாவை அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 23ம் தேதி ஜெயலலிதா பதவியேற்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் 21ம் தேதி ஜெயலலிதா தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்து அவரை அப்செட்டாக்க கர்நாடக அரச முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications