பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி விபச்சாரிதான்.. வருத்தம் தெரிவிக்க முடியாது.. எம்எல்ஏ அடாவடி!
பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரியை பாலியல் தொழிலாளி என்றதற்கு மன்னிப்பு கேட்கபோவதில்லை என கேரள எம்எல்ஏ ஜார்ஜ் பிடிவாதமாக உள்ளார்.
திருவனந்தபுரம்: பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரியை பாலியல் தொழிலாளி என்றதற்கு மன்னிப்பு கேட்கபோவதில்லை என கேரள எம்எல்ஏ ஜார்ஜ் பிடிவாதமாக உள்ளார்.
கோட்டயம் குருவிளங்காட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் கன்னியாஸ்திரியை பாதிரியார் பிராங்கோ கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டுவரையிலான காலங்களில் பலமுறை பலாத்காரம் செய்தார் என்று புகார் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து வாடிகன் திருச்சபைக்கும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி கடிதம் எழுதியுள்ளார்.

கேரள எம்எல்ஏ
இந்நிலையில் பூஞ்சார் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ பி.சி. ஜார்ஜ் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கன்னியாஸ்திரி குறித்து மோசமான கருத்துக்களை அவர் தெரிவித்தார்.

ஏன் முதலில் கூறவில்லை
அவர் பேசியதாவது, கன்னியாஸ்திரி பாலியல் தொழிலாளி என்பதில் ஏதும் சந்தேகம் உள்ளதா? 12 முறை பாதிரியார் பலாத்காரம் செய்தார் என்று கன்னியாஸ்திரி புகாரில் தெரிவித்துள்ளார், ஏன் முதல் முறை பலாத்காரம் செய்யப்பட்டவுடன் தெரிவிக்காமல் தாமதமாக கூறுகிறார்.

மகளிர் ஆணையம் கண்டனம்
பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி என்று விமர்சனம் செய்தார் பி.சி. ஜார்ஜ்.
எம்எல்ஏவின் இந்த மோசமான விமர்சனத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது.

மன்னிப்பு கேட்கமுடியாது
பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ், பாலியல் தொழிலாளி என்றது கோபத்தில் பேசியவார்த்தையாகும், பாலியல் தொழிலாளி என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்கப்போவது கிடையாது என கூறியுள்ளார்.

நிலையாக உள்ளேன்
என்னை பொறுத்தவரையில் அவர் கன்னியாஸ்திரி கிடையாது. எந்தஒரு பெண்ணையும் பாலியல் தொழிலாளி என்பது தவறானது. இதுபோன்ற வார்த்தைகளை இனி பயன்படுத்த மாட்டேன். ஆனால் அந்த பெண் குறித்து நான் வெளியிட்ட கருத்துக்களில் நான் நிலையாக உள்ளேன், வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு ஜார்ஜ் கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications