கோத்தகிரியில் கனமழையால் விபரீதம் - மரம் சாய்ந்ததால் கார் மீது விழுந்த மின்கம்பிகள்
கோத்தகிரி: கோத்தகிரியில் மரம் சாய்ந்ததில் காரின் மீது மின் கம்பிகள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று வீசிய காற்றின் காரணமாக கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு செல்லும் சாலையில் மதியம் 1.45 மணிக்கு ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது அந்த மரத்தின் கிளைகள் மின்சார கம்பிகள் மீது விழுந்ததில் 2 மின் கம்பங்கள் சாலையில் விழுந்தன.
அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மும்முனை இணைப்பு மின்சார கம்பிகள் விழுந்தன. உடனே காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி விட்டனர். காரில் கோத்தகிரி பகுதியை சேர்ந்த தந்தை, மகள் வந்ததாக தெரிகிறது. அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. மரம் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 5 மீட்டர் தூரத்தில் கார் நிறுத்தப்பட்டதாலும், காரின் மீது மின்கம்பிகள் விழுந்தவுடன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றி, மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் காரின் மீது விழுந்த மின் கம்பிகளும் அகற்றப்பட்டன.
மேலும் ரோட்டின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மரம் அகற்றப்பட்ட பின்னர் 2.45 மணிக்கு போக்குவரத்து சீரானது. கார் மீது மின் கம்பிகள் விழுந்த சம்பவம் குறித்து தகவல் பரவியதால் அங்கு ஏராளமான மக்கள் கூடினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே கோத்தகிரியை அடுத்த கீழ்கோத்தகிரி முத்தமிழ் நகரில் வசிக்கும் மாலைமணி மற்றும் தேன்மொழி ஆகியோரின் வீடுகளின் ஒரு பகுதி மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த கீழ்கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் நந்தினி, கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர். அவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications