கோத்தகிரியில் கனமழையால் விபரீதம் - மரம் சாய்ந்ததால் கார் மீது விழுந்த மின்கம்பிகள்
கோத்தகிரி: கோத்தகிரியில் மரம் சாய்ந்ததில் காரின் மீது மின் கம்பிகள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று வீசிய காற்றின் காரணமாக கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு செல்லும் சாலையில் மதியம் 1.45 மணிக்கு ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது அந்த மரத்தின் கிளைகள் மின்சார கம்பிகள் மீது விழுந்ததில் 2 மின் கம்பங்கள் சாலையில் விழுந்தன.
அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மும்முனை இணைப்பு மின்சார கம்பிகள் விழுந்தன. உடனே காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி விட்டனர். காரில் கோத்தகிரி பகுதியை சேர்ந்த தந்தை, மகள் வந்ததாக தெரிகிறது. அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. மரம் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 5 மீட்டர் தூரத்தில் கார் நிறுத்தப்பட்டதாலும், காரின் மீது மின்கம்பிகள் விழுந்தவுடன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றி, மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் காரின் மீது விழுந்த மின் கம்பிகளும் அகற்றப்பட்டன.
மேலும் ரோட்டின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மரம் அகற்றப்பட்ட பின்னர் 2.45 மணிக்கு போக்குவரத்து சீரானது. கார் மீது மின் கம்பிகள் விழுந்த சம்பவம் குறித்து தகவல் பரவியதால் அங்கு ஏராளமான மக்கள் கூடினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே கோத்தகிரியை அடுத்த கீழ்கோத்தகிரி முத்தமிழ் நகரில் வசிக்கும் மாலைமணி மற்றும் தேன்மொழி ஆகியோரின் வீடுகளின் ஒரு பகுதி மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த கீழ்கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் நந்தினி, கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர். அவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications