வசுந்தரராஜே மகன் நிறுவனத்துக்கு ரூ11.63 கோடி கொடுத்த லலித் மோடி -அமலாக்கப் பிரிவு விசாரணை!!
டெல்லி: ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியாவின் மகனுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு லண்டனில் தலைமறைவாக இருக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியின் நிறுவனம் ரூ11.63 கோடி கொடுத்திருப்பது தொடர்பாகவும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
ஐ.பி.எல். போட்டிகளில் நிதி முறைகேடு புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சமடைந்துள்ளார் லலித் மோடி. அவருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோர் உதவி வந்துள்ளனர். இதனை லலித் மோடியும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் லலித் மோடிக்கு சொந்தமான ஆனந்த் ஹெரிடேஜ் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு மொரீஷியஸ் நாட்டு நிறுவனங்கள் மூலமாக ரூ21 கோடி கைமாறியது குறித்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த பணமானது ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராஜே சிந்தியாவின் மகனும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யுமான துஷ்யந்த் சிங்கின் நியாந்த் ஹெரிடேஜ் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலமாக கைமாறியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வசுந்தரராஜே மகன் நிறுவனத்துக்கு மொத்தம் ரூ11.63 கோடி கடனாகவும் பங்குகள் வாங்கியது தொடர்பாகவும் லலித் மோடி நிறுவனம் கொடுத்திருக்கிறது.
இதில்தான் அன்னிய செலாவணி முறைகேடு நடந்திருப்பதாகவும் அமலாக்கப் பிரிவு சந்தேகித்து விசாரணைகளை நடத்தி வருகிறது. ஆனால் வசுந்தரராஜே சிந்தியாவின் மகனோ, அனைத்து கணக்குகளும் வெளிப்படையானவே எனக் கூறி வருகிறார்.
லலித் மோடி விவகாரத்தில் என்னென்ன பூதம் கிளம்புமோ?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications