மகாத்மா காந்தியின் 147வது பிறந்தநாள்... நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மலர்தூவி மரியாதை
டெல்லி: மகாத்மா காந்தியின் 147வது பிறந்ததினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அவரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மகாத்மா காந்தியின் 147வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்ககைய்ய நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல், நாடு முழுவதும் அவரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தும் மற்றும் உருவ படத்திற்கு மலர்தூவியும் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னையிலும் மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதேபோல், அமைச்சர்கள் ஓ பன்னீர் செல்வம், காமராஜ் உள்ளிட்டோரும் மலர் தூவி தங்களது மரியாதையைச் செலுத்தினர்.
லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்:
இன்று முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 112வது பிறந்தநாளும் கொண்டாடப்படுகிறது. எனவே அவரது நினைவிடத்திலும் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications