ராகுல் காந்தி யாத்திரைக்கு மணிப்பூர் அரசு ஒருவழியாக அனுமதி.. ஆனால் ஒரு கண்டிஷன்!
இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' தொடக்க நிகழ்வை நடத்த மணிப்பூர் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
மணிப்பூரில் இருந்து மும்பை வரை 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என்கிற பெயரில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி யாத்திரை நடத்தவுள்ளார். முன்னதாக, பாரத் ஜோடோ யாத்திரையின்போது 4,500 கி.மீ பயணம் செய்த ராகுல் காந்தி, தற்போது இந்த யாத்திரையில் 6,200 கிமீ தூரம் பயணிக்க உள்ளார். மணிப்பூர், நாகலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு ராகுல் காந்தி பயணம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

வரும் 2024 மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தியின் பாரத ஜோடோ நியாய யாத்திரை பெறும் கவனம் பெற்றுள்ளது. வரும் ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கி மார்ச் 20 வரை இந்த யாத்திரை நடைபெறும் என அண்மையில் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்நிலையில், ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரையை மணிப்பூரில் தொடங்க அம்மாநில பாஜக அரசு அனுமதி மறுத்ததாக தகவல் வெளியானது.
மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் ஹட்டா கங்ஜெய்புங் மைதானத்தில் இருந்து ஜனவரி 14ஆம் தேதி பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை தொடங்க அனுமதி கோரி அம்மாநில காங்கிரஸ் கட்சி ஜனவரி 2ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்தது. மணிப்பூர் அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்காததால், மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மேகச்சந்திர சிங் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை முதல்வர் பிரேன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
எனினும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம்காட்டி அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. குக்கி மைத்தேயி இன மக்கள் இடையேயான மோதல், வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை, அவ்வப்போது வன்முறைகள் நடக்கின்றன என்பதைக் காரணம் காட்டி, காங்கிரஸ் கட்சியின் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூரில் ராகுல் காந்தி யாத்திரை தொடக்க நிகழ்வுக்கு மணிப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாரத் நியாய் யாத்ரா தொடக்க நிகழ்வுக்கு மணிப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. குறைந்த அளவிலான தொண்டர்களுடன் நிகழ்வை நடத்த மணிப்பூர் அரசு அனுமதித்துள்ளது. இதையடுத்து, இம்பால் நகரின் ஹப்தா கஞ்ச்ஜெய்பங்க் பகுதியில் இருந்து ராகுல் நடைபயணம் தொடங்குகிறது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications