ராஜஸ்தானில்... கொத்து, கொத்தாக இறந்து விழுந்த காகங்கள்... பீதியில் உறைந்த மக்கள்!

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் ராடி என்னும் பகுதியில் திடீரென கொத்து, கொத்தாக காகங்கள் இறந்து விழுந்தன. பறவை காய்ச்சல் காரணமாக அந்த காகங்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அரசு அதிகாரிகள் குழுவினர் இறந்து போன காகங்களின் மாதிரியை சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது.

many Crows die suddenly in Rajasthan

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் ராடி என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் பறந்து திறந்த ஏராளமான காகங்கள் திடீரென கொத்து, கொத்தாக உயிரிழந்து விழுந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். பறவை காய்ச்சல் காரணமாக அந்த காகங்கள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்தது.

மேலும், அந்த பகுதியில் உள்ள கோழி பண்ணைகள் மற்றும் கோழி இறைச்சி கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.சிறப்பு அரசு அதிகாரிகள் குழுவினர் இறந்து போன காகங்களின் மாதிரியை சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். கோழிப்பண்ணைகளில் இருந்தும் மாதிரிகள் சேகரிக்கபப்ட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

கோழிப்பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், அழிக்கப்படும் கோழிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என்று ஜலாவர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+