உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
இந்திய குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி இன்று அறிமுகப்படுத்தினார்.
டெல்லி: இந்திய குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி இன்று அறிமுகப்படுத்தினார்.
ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம் என்று இது அழைக்கப்படுகிறது. பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த விழாவில் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் உலகில் உள்ள பல மருத்துவ நிறுவனங்கள் இதை வரவேற்றுள்ளது.

எவ்வளவு வரும்
இதன் மூலம் இந்தியா முழுக்க மொத்தம் 10 கோடி குடும்பங்கள் பயன் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் 5 லட்சம் ரூபாய் வரை ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு அளிக்கப்படும். தமிழகத்தில் ஏற்கனவே இதேபோல் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே பெரியது
இதுதான் உலகில் மிகப்பெரிய மருத்துவ திட்டம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஒபாமா மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதை அடிப்படையாக வைத்து இந்த திட்டம் இப்போது கொண்டது வரப்பட்டுள்ளது. இதை ''மோடி-கேர்'' என்றும் அழைக்கிறார்கள்.

என்ன பிரிவு
இதில் 10 கோடி குடும்பம் மூலம் மொத்தம் 50 கோடி மக்கள் வரை பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. அதிகமாக கிராமத்து மக்கள் பயன் பெறும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கிராமத்தில் 8.03 கோடி குடும்பமும், நகரங்களில் 2 கோடி குடும்பமும் இதன் மூலம் பயனடையும்.

எப்படி செய்ய வேண்டும்
இந்த திட்டத்தில் பயன பெற சில அடிப்படை வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக தனி இணையதள பக்கம் உருவாக்கப்பட உள்ளது. மொத்தமாக் 8,735 மருத்துவமனைகள் இதில் இப்போது வரை இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்,
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications