பசு காவலர்கள் தாக்குதல்.. அஞ்சும் மாநகராட்சி ஊழியர்கள்.. கேட்பாரன்றி அலையும் மாடுகள் அதிகரிப்பு
டெல்லி: பஞ்சாப்பின், மொகாலி மாநகராட்சியில் பராமரிப்பின்றி தெருவில் திரியும் பசுமாடுகளை பிடித்து கொண்டு செல்ல பணியாளர்கள் அஞ்சுவதால் அங்கு மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளது.
மொகாலி கமிஷனர் தங்கள் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தாலும், பாதுகாப்பை உறுதி செய்ய இன்னும் எதுவும் செய்யவில்லை.
மாடுபிடி பிரிவின் தலைவரான, கிசார் சிங்கின் பேட்டிபடி, பிப்ரவரி 18, மார்ச் 10, மார்ச் 14, ஏப்ரல் 12, ஜூன் 2 ஆகிய இவ்வாண்டில் மட்டும் 5 நாட்களில் தங்கள் ஊழியர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்கிறார்.

போலீசார் நடவடிக்கை இல்லை
ஒவ்வொரு தாக்குதலுக்கும் பின்னர் போலீசில் புகார் வழங்கப்பட்டது என்று கிசார் கூறுகிறார். ஆனால் அவர்கள் பாதுகாப்பு வழங்கவில்லை அல்லது ஊழியர்களை தாக்கியவர்களை எதிர்த்து அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

கத்தி வைத்து மிரட்டல்
"மார்ச் 10 அன்று, எங்கள் குழு மாட்யூர் பகுதிக்கு சென்றபோது தெருவில் திரிந்த பசுக்களின் உரிமையாளர், எங்கள் ஊழியர்களில் ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுவேன் என்று அச்சுறுத்தினார். எனவே, நாங்கள் பசுக்களை விடுவிக்க வேண்டியதாயிற்று. இது முதல் நிகழ்வு அல்ல. மாடுகளை பிடிக்கப் போகும் போதெல்லாம் இப்படி நடக்கிறது, "என்று கேசர் சிங் கூறியுள்ளார்.

பார்க் பக்கம் மேய்ச்சல்
கால்நடை உரிமையாளர்கள் பசுக்களை, சுதந்திரமாகச் சாப்பிட்டு தெருக்களில் அலைய அனுமதிக்கிறார்கள். அவர்கள் பொதுவாக புல்வெளிகள் அதிகமுள்ள பூங்காக்களுக்கு அருகிலேயே பசுக்களை விடுவிக்கிறார்கள்.

அபராத தொகை
பசுக்களை பிடித்து உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் என்ற வகையில் மட்டும் மொகாலி மாகராட்சி ரூ.3.17 லட்சம் சம்பாதித்துள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதமாக பசுக்களை பிடிக்க முடியாமல் வருமானம் குறைந்துவிட்டது. பசு காவலர்கள் அதிகரித்துவிட்டதால் இனிமேல் பல நகரங்களிலும் இப்படி பசு மாடுகள் தெருவில் அலையவிடுவது அதிகரிக்கும் என நம்பலாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications