சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்- பத்தினம் திட்டா ஆட்சியர் அறிவிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் ஹரிகிஷோர் சபரிமலை வந்தார். சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, "சபரிமலை வரும் பக்தர்களுக்கு எவ்வித சிரமும் ஏற்படாத வகையில் அனைத்து வசதிகளும் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓட்டல்களில் தேவைக்காக கொண்டு வரப்படும் சமையல் கேஸ் சிலிண்டர்கள் வைக்கும் இடம், வெடிமருந்து வைக்கும் இடங்கள் ஆகியவற்றை விபத்து ஏற்படாத வண்ணம் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்படும்.

பக்தர்களின் வசதிக்காக பம்பை முதல் சன்னிதானம் வரை அரசு ஆயுர்வேத, ஹோமியோ அலோபதி மருத்துவமனைகள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.
அலோபதி மருத்துவமனையில் தினமும் 1000 பேரும், சித்த மருத்துவமனையில் தினமும் 600க்கும் மேற்பட்டோரும் சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் இந்த மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். சபரிமலை பகுதியில் போதை, புகையிலை ப பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவற்றின் விற்பனையை கண்காணிக்க கலால் துரையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்துக்கு இடமான இடங்களில் கலால் துறையினர் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சபரிமலையை சுத்தமாக வைத்திருக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடைகள் மற்றும் ஹோட்டல்கள் கண்டிப்பாக விலை பட்டியல் வைத்திருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விலை விவர பட்டியலில் போலீஸ் உள்பட அவசர தேவைக்காக டெலிபோன் எண்களை குறிப்பிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications