சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்- பத்தினம் திட்டா ஆட்சியர் அறிவிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் ஹரிகிஷோர் சபரிமலை வந்தார். சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, "சபரிமலை வரும் பக்தர்களுக்கு எவ்வித சிரமும் ஏற்படாத வகையில் அனைத்து வசதிகளும் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓட்டல்களில் தேவைக்காக கொண்டு வரப்படும் சமையல் கேஸ் சிலிண்டர்கள் வைக்கும் இடம், வெடிமருந்து வைக்கும் இடங்கள் ஆகியவற்றை விபத்து ஏற்படாத வண்ணம் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்படும்.

பக்தர்களின் வசதிக்காக பம்பை முதல் சன்னிதானம் வரை அரசு ஆயுர்வேத, ஹோமியோ அலோபதி மருத்துவமனைகள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.
அலோபதி மருத்துவமனையில் தினமும் 1000 பேரும், சித்த மருத்துவமனையில் தினமும் 600க்கும் மேற்பட்டோரும் சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் இந்த மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். சபரிமலை பகுதியில் போதை, புகையிலை ப பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவற்றின் விற்பனையை கண்காணிக்க கலால் துரையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்துக்கு இடமான இடங்களில் கலால் துறையினர் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சபரிமலையை சுத்தமாக வைத்திருக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடைகள் மற்றும் ஹோட்டல்கள் கண்டிப்பாக விலை பட்டியல் வைத்திருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விலை விவர பட்டியலில் போலீஸ் உள்பட அவசர தேவைக்காக டெலிபோன் எண்களை குறிப்பிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications