ஓகி புயல் முன்னெச்சரிக்கை குளறுபடி பற்றி நாடாளுமன்றத்தில் மத்திய அரசை விளாசிய எம்பிக்கள்
இயற்கை சீற்றத்திலிருந்து உயிர்கள் பலியாவதை தடுக்க கண்காணிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
டெல்லி: நாடாளுமன்ற விவாதத்தின் போது இயற்கை சீற்றத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் மீனவர்களுக்காக பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த எம்பிக்கள் கட்சி பாகுபாடின்றி குரல் கொடுத்தனர்.
மக்களவையில் இயற்கை சீற்றம் குறித்த விவாதத்தின் போது, ஒகி புயலில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் பெருமளவு பாதிப்பை உண்டு செய்துள்ளதாக தமிழக எம்.பி. சுதர்சனம் மற்றும் கேரள எம்.பி வேணுகோபால் ஆகியோர் எடுத்துரைத்தனர். கன்னியாகுமரியிலிருந்து கடலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்களின் நிலை தற்போது வரை என்ன ஆனது என்று தெரியாத நிலையில் உள்ளதாக அவையில் தெரிவிக்கப்பட்டது.

கேரளா மற்றும் கன்னியாகுமரியில் கடலோர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல ஆயிரம் குடும்பங்கள் சோகத்தில் முழ்கியுள்ளது. இயற்கை சீற்றத்திற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது என்றாலும், முன்னேச்சரிக்கை வழங்க வேண்டிய சில அதிகாரிகளின் தவறுகளால் பல உயிர்கள் பலியாகி விட்டதாக எம்.பிக்கள் தெரிவித்தனர்.
நாட்டில் உள்ள அனைத்து சம்பந்தப்பட்ட அமைப்புகளும் ஒன்றிணைந்து இயற்கை சீற்றங்களை தடுக்க பாடுபட வேண்டும். இனி ஒரு மீனவனின் உயிர் கூட போகக்கூடாது, அதற்கு அரசு முறையான கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கேரள மற்றும் தமிழக பகுதிகளுக்கு போதிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் அவையில் வலியுறுத்தப்பட்டது.
இந்த விவாதத்தில், காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்ட், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் கட்சி பாகுபாட்டை மறந்து ஒன்றாக இணைந்து குரல் கொடுத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications