மகனின் சேமிப்பு பணத்தில் அபராதம் செலுத்திய ஆட்டோ ஓட்டுநர்....மனம் பொறுக்காத அதிகாரியின் மனித நேயம்
நாக்பூர்: நோ பார்க்கிங் இல் வாகனத்தை நிறுத்தியால் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது இளம் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு.. அவர் தனது மகனின் உண்டியல் சேமிப்பு பணம் 2 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்த கட்ட முன்வந்தார். இதை கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் தானே அந்த அபராதத்தை கட்டி ஆட்டோவை அவரிடம் ஒப்படைத்தார்,
நாக்பூர் போலீசாரின் இந்த செயலால் சிறுவனின் உண்டியல் சேமிப்பு அவருக்கே திரும்பி அளிக்கப்பட்டது. அத்துடன் ஆட்டோவும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நாக்பூர் போலீஸ் அதிகாரியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் மக்களின் இதயங்களை வென்றுள்ளது. பலரும் நாக்பூர் போலீஸ் அதிகாரி அஜய்குமார் மாளவியாவை பாராட்டி வருகிறார்கள்.
பெரும்பாலான காவலர்கள் சட்டத்தின் பாதுகாவலர்கள் என்பதால் அவர்களை கடுமையான குணம் படைத்தவர்கள், இரக்கமே இல்லாதவர்கள் என்றெல்லாம் சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் அவர்களின் இளகிய மனம் அடிக்கடி வெளிப்படும். அப்படித்தான் நாக்பூரில் வெளிப்பட்டுள்ளது,

நோ பார்க்கிங்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த ஆகஸ்ட் 8 ம் தேதி ரோஹித் கட்சே என்ற ஆட்டோ டிரைவர் வாகன நிறுத்தம் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்தியதற்காக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். பரிவாகன் இணையதளத்தில் அவர் பெயருக்கு எதிராக முன்பு பணம் செலுத்தாத சலனங்கள் இருந்தது. இதனால் அவரது ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

மகனின் உண்டியல் பணம்
ஆனால் ரோஹித் கட்சே நீண்டகால ஊரடங்கு காரணமாக, கட்சே கடனில் இருந்தார். அவரிடம் எந்த சேமிப்பும் இல்லை. கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தார். வேறு வழியே இல்லாத சூழலில் அவரது குழந்தை சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்துடன் ஆட்டோவை மீட்பதற்காக சேமிப்பை அபராதமாக வழங்க வந்திருக்கிறார்.

நாக்பூர் போலீசார்
ஆனால் , கவுண்டரில் ஏற்க மறுத்துவிட்டனர். இதை உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து நாக்பூரில் உள்ள சீதாபுல்டி போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் அஜய்குமார் மாளவியா, தானே அவரது 2000 அபராதத்தை செலுத்தினார். அத்துடன் அவரது நிலைமைக்கு அனுதாபம் தெரிவித்தாலும், இனிமேல் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு டிரைவரை எச்சரித்தார். இதை நாக்பூர் போலீசார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

காவல்துறைக்கு பாராட்டு
சமூக ஊடகங்களில் இதை பார்த்த மக்கள் பலர் காவல் துறை அதிகாரியான அஜய்குமார் மாளவியாவை பாராட்டி உள்ளார்கள். மக்களின் இதயங்களை நாக்பூர் போலீசார் வென்றுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ ரோஹித் கட்சேவிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications