பாகிஸ்தான் எல்லையில் சுவர் எழுப்பும் திட்டமில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு!
இந்திய- பாகிஸ்தான் எல்லையில் சுவர் எழுப்பும் திட்டமில்லை என உள்துறை இணையமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்திய- பாகிஸ்தான் எல்லையில் சுவர் எழுப்பும் திட்டமில்லை என உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைதான் மத்திய அரசு செய்து வருவதாகவும் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
அண்மையில் எல்லையில் சுவர் எழுப்படும் என்ற பேச்சு அமெரிக்காவில்தான் பெருமளவு அடிப்பட்டது. மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக மக்கள் குடியேறுவதை தடுக்கும் வகையில் அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் மிகப்பெரிய சுவர் கட்டப்படும் என அவர் அறிவித்தார். இதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தது.

முன்னதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்று திரும்பிய பிறகு உள்துறை அமைச்சகம் இந்திய பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் வலிமையான சுவர் ஒன்றை கட்ட இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ ராஜ்யசபாவில் இன்று இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மத்திய அரசு பல பக்க அணுகுமுறையைதான் பின்பற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களை குவித்தல், எல்லை வேலி கட்டமைப்பு, எல்லை சாலைகள் கட்டமைப்பு, வெள்ள விளக்குகளை நிறுவுதல் ஹைடெக் கண்காணிப்பு உபகரணங்களை அறிமுகப்படுத்துதல், ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு படைக்கான சிறப்பு வாகனங்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் தான் நடைபெற்று வருகிறது என்றும் மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications