சீனாவை அச்சுறுத்தும் அக்னி 5 ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை வெற்றி!
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை இன்று ஒடிசாவில் நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் வீலர் தீவில் நடத்தப்பட்ட அக்னி 5 ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த அக்னி 5 ஏவுகணை அண்டை நாடான சீனாவை அச்சுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி - 5 ஏவுகணையின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்ததாக இந்தியா ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் தெரிவித்தது. இதையடுத்து இந்த ஏவுகணை ஒடிசா மாநிலம் வீலர் தீவிலிருந்து இன்று கடைசி முறையாக சோதனை செய்யப்பட்டது.

இந்த அக்னி 5 ஏவுகணை 5,500 முதல் 5,800 கி.மீ.,க்கும் அதிகமான தொலைவில் இருக்கும் எதிரிகளின் இலக்கை தாக்கி துவம்சம் செய்யும் திறன் கொண்டது.முக்கியமாக வடக்கு சீனா வரை சென்று தாக்கும் திறனுடன் இந்த அக்னி 5 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
50 ஆயிரம் கிலோ எடையுடன் இந்த அதிநவீன அக்னி 5 ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 17 மீட்டர் நீளம் கொண்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த அக்னி 5 ஏவுகணை கடந்த 3 ஆண்டுகளில் 3 முறை நடத்தப்பட்டுள்ளது.
தற்போது நடத்தப்பட்ட இந்த 4வது சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றதன் மூலம் அதிக சக்திவாய்ந்த ஏவுகணைகளை வைத்துள்ள அமெரிக்க, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.
8000 முதல் 10,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட அக்னி 6 ஏவுகணைகள் விரைவில் உருவாக்கப்படும் என இந்திய ராணுவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications