உலகின் 7 பெரிய மலைகளில் ஏறி ஹரியானா "டுவின்" சகோதரிகள் "திரில்" சாதனை
சோனிபேட்: ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் உலகின் 7 முக்கிய மலைகளில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் சோனிபேட் பகுதியைச் சேர்ந்தவர்கள் நுங்க்ஷி மற்றும் தஷி மாலிக் என்ற இரட்டை சகோதரிகள்.
தற்போது 23 வயதாகும் இந்த சகோதரிகல் கடந்த 2009ம் ஆண்டு உத்தர்கஷி என்ற இடத்தில் உள்ள நேரு இன்ஸ்டிடியூட் ஆப் மவுண்டேநிரிங்-ல் மலையேறும் கலையை விடுமுறை பயிற்சியாக ஆராம்பித்தனர். தொடர்ந்து மலையேற்றத்தில் ஆர்வம் அதிகரிக்கவே, 2010ம் ஆண்டு மவுண்ட் ருடுகைர (5,490) ஏறினர்.

பின்னர் மலையேற்றத்தில் மேலும் பல சாதனைகளைப் புரிந்த இந்தச் சகோதரிகள் தற்போது கிராண்ட் ஸ்லாம் என அழைக்கப்படும் நார்த் மற்றும் செளத் போல் மலைகளை ஏறி சாதனை படைத்துள்ளனர்.இது இந்தியாவிலும் மட்டுமல்ல தெற்கு ஆசியாவிலும் நிகழ்த்தப்பட்ட புதிய சாதனை ஆகும்.
அது மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்துக் கண்டங்களிலும் உள்ள 7 முக்கிய மலைகளிலும் இவர்கள் ஏறியுள்ளனர். அதாவது எவரெஸ்ட் சிகரம், கிளிமஞ்சாரோ, டெனாலி, அகோன்காகா, வின்சன் மாசிப், எல்பிரஸ் சிகரம், கோசுஸிகா சிகரம், கார்டெனஸ் பிரமிட் ஆகியவற்றில் அவர்கள் ஏறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications