ஆதாரம் இருந்தால் ஜெயிலுக்கு அனுப்புங்கள், 'மீடியா டிரையல்' கூடாது: கனையா குமார் கோபம்
டெல்லி: தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கோஷங்கள் எழும்பியதாக தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஜவர்லால் நேரு பல்கலைக் கழக (ஜே.என்.யூ.) மாணவர் சங்கத் தலைவர் கனையாகுமார் டெல்லி, பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வக்கீல்கள் குழு ஒன்று தாக்கியதோடு, வந்தே மாதரம் என கோஷமிட்டது.

இந்த சலசலப்புக்கு பிறகு கனையாகுமார் நீதிபதியிடம் கூறியதாவது: இந்திய அரசியலமைப்பு மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த 9ம் தேதி நடைபெற்ற (கோஷம்) சம்பவத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
சம்பவ வீடியோவை நான் பார்த்த பிறகுதான், வெளியில் இருந்து வந்த சிலர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இவ்வாறு கோஷமிட்டது தெரியவந்தது. அதுபோன்ற கோஷங்களுக்கு எனது ஆதரவு கிடையாது. இந்த நாட்டின் அமைதியை கெடுக்க யாரும் முயல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மீடியாக்களே விசாரணை நடத்தி எனக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்பி வருவது மிகுந்த வருத்தத்தை தருகிறது. நான் குற்றம் செய்ததற்கு ஆதாரம் இருந்தால் என்னை சிறையில் தள்ளுங்கள். ஆதாரம் இல்லாவிட்டால், மீடியா டிரையல் (மீடியா விசாரணை) நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு கனையாகுமார் தெரிவித்தார்.
இதனிடையே கனையா குமாருக்கு ஜாமீன் வழங்க தங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துவிட்டனர். இருப்பினும், மார்ச் 2ம் தேதிவரை, கனையாகுமாருக்கு நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது கோர்ட். எனவே அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications