ஜம்முவில் ராணுவ ஹெலிபேடை நோட்டமிட்ட பாக். ஆசாமி கைது
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ். புரா செக்டாரில் உள்ள ராணுவ ஹெலிபேட் அருகே சுற்றித் திரிந்த பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் கடந்த புதன்கிழமை இரவு எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின.

இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன, ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள கிராமங்களில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பாகிஸ்தான் தனது படைகளை எல்லைக்கு அருகே குவித்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ். புரா செக்டாரில் சர்வதேச எல்லையையொட்டியுள்ள அக்ரீசாக் கிரமாத்தில் இருக்கும் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் தளம் அருகே பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்தார்.
இதையடுத்து ராணுவத்தார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் அவர் பாகிஸ்தானில் உள்ள அஸ்திலியா கிராமத்தை சேர்ந்த அபுபக்கர் சுஹாக் என்பது தெரிய வந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications