நடப்பாண்டில் மாநிலங்களுக்கு கூடுதலாக 21% நிதி ஒதுக்கீடு: முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி
டெல்லி: நடப்பாண்டில் மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக 21% நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக டெல்லியில் இன்று நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மாநில முதல்வர்கள் மாநாடு கடைசியாக 2006ம் ஆண்டு நடந்தது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நடைபெற்றது.

2014ல் மோடி அரசு அமைந்த போதே இந்த கூட்டத்தை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் மண்டல வாரியாக நாட்டின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று 5 மண்டலங்களில் கூட்டம் நடத்தி அந்த மண்டலங்களை சேர்ந்த முதல்வர்களை சந்தித்து கருத்துக்களை பெற்றனர்.
இதைத் தொடர்ந்து மாநில முதல்வர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் 11-வது மாநில முதல்வர்கள் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, வெங்கையாநாயுடு, நிதின் கட்கரி, மனோகர்பாரிக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதிலாக நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயணசாமி, உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கிய பின்னர் சற்று தாமதமாக கேஜ்ரிவால் வருகை தந்தார். உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
#Delhi : @PMOIndia @narendramodi chairs the 11th meeting of Inter-State Council. pic.twitter.com/MxruLIO8YK
— All India Radio News (@airnewsalerts) July 16, 2016
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா போன்ற பெரிய நாட்டில் விவாதம், ஆழ்ந்த சிந்தனை, கொள்கைகள் பற்றிய ஆலோசனைகள் இருக்க வேண்டும் என்று வாஜ்பாய் கூறினார்.
மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நாட்டில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாநிலங்களுக்கு கூடுதலாக 21 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications