சர்வதேச யோகா தினம்... டெல்லியில் மோடி தலைமையில் 37000 பேர் பங்கேற்பு... இந்தியா கின்னஸ் சாதனை!
டெல்லி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மெகா யோகா தின நிகழ்ச்சியில் சுமார் 37 ஆயிரம் பேர் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
முதல் சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு வருகிறது. போர் காரணமாக ஏமனில் மட்டும் யோகா தினக் கொண்டாட்டம் இல்லை.
நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐநா தலைமையகத்திலும் இன்று சர்வதேச யோகாதினம் கொண்டாடப் படுகிறது. டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொள்கொண்டு யோகா பயிற்சி செய்கிறார்கள்.
உலகம் முழுவதும் கோலாகலமாக யோகா தினத்தைக் கொண்டாடி வரும் வேளையில், யோகா நிகழ்ச்சியில் சாதனை புரிந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா.

டெல்லியில்...
இந்தியாவில் 650 மாவட்டங்களிலும், உலகின் 193 நாடுகளில் ஏமன் தவிர 192 நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, தலைநகர் டெல்லியில் ராஜ்பாத்தில் இன்று மெகா யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

மோடி தலைமையில்...
இதில் பிரதமர் மோடி தலைமையில் சுமார் 37 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர். இது போல், அதிக அளவிலான மக்கள் ஒரே இடத்தில் கூடி யோகா செய்வது இது தான் முதல்முறையாகும்.

கின்னஸ் சாதனை...
முன்னதாக கடந்த 2005ம் ஆண்டு குவாலியரில் விவேகானந்தா கேந்திரத்தில் 29,973 பேர் ஒரே இடத்தில் கூடி யோகா செய்ததே மெகா சாதனையாக கருதப்பட்டது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்து ராஜ்பாத் யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

பலதரப்பட்ட மக்கள்...
ராஜ்பாத் யோகா நிகழ்ச்சியில் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள். பள்ளி மாணவர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், சாமானிய மக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துக் கொண்டனர்.

வெள்ளை நிற உடை...
மோடி உட்பட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் வெள்ளை நிற உடையணிந்து மூவர்ண ஸ்கார்ப் அணிந்திருந்தனர்.

கெஜ்ரிவால்...
இந்த யோகா தின நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘யோகா மிகவும் நல்லது. இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும்' எனத் தெரிவித்தார்.

8000 போலீசார்...
ராஜ்பாத் யோகா தின நிகழ்ச்சி பாதுகாப்பு பணியில் சுமார் 8 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர். கடந்த 14ம் தேதி முதலே அப்பாதையில் போக்குவரத்து நெறிமுறைகள் அமல் படுத்தப் பட்டிருந்தது குறிப்பிடத்தகக்து.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி












Click it and Unblock the Notifications