வங்கியை மட்டுமல்ல, நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஏமாற்றிய நீரவ் மோடி!
Recommended Video

மும்பை: விளம்பர படத்தில் நடித்த பணத்தை தராத நீரவ் மோடிக்கு எதிராக வழக்கு தொடர நடிகை பிரியங்கா சோப்ரா திட்டமிட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 280 கோடி மோசடியும், சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்த வகையில் ரூ.11, 600 கோடியும் வைரவியாபாரி நீரவ் மோடி மோசடி செய்துவிட்டார் என்று, பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

நீரவ் மோடியின் நகைக்கடைகளுக்கு சர்வதேச அளவில் விளம்பரத் தூதராக இருந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
அவர் டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கூறுகையில், நீரவ் மோடியின் பல்வேறு விளம்பரப்படங்களில் நடித்தேன். இன்னும் முறையான ஊதிய நிலுவை தொகையை தரவில்லை. எனக்கு சரியாக ஊதியம் தராத காரணத்தால் அவர்கள் நிறுவனத்துடனான உறவை ஏற்கெனவே துண்டித்துவிட்டேன் என கூறியுள்ளார்.
மேலும் தன்னை ஏமாற்றிய நீரவ் மோடி மீது வழக்கு தொடர பிரியங்கா சோப்ரா முடிவு செய்யதுள்ளார்.












Click it and Unblock the Notifications