Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மக்கள் தொகை ஆர்மி.." முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கருத்தடை சாதனம் சப்ளை- அசாம் முதல்வரால் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி: முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கருத்தடை சாதனைகளை வினியோகம் செய்ய மக்கள் தொகை ராணுவம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ள உத்தர பிரதேச மாநிலத்திலும் மக்கள் தொகை குறைப்பு தொடர்பாக புதிய கொள்கையை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கொண்டு வந்துள்ளார்.

முஸ்லீம்களை சீண்டும் வகையில் இந்த கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஒரு மதத்தினரை குற்றம்சாட்டவே இது பயன்படும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அசாம் பாஜக ஆட்சி

அசாம் பாஜக ஆட்சி

அசாமை பொறுத்தளவில், சமீபத்தில் பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. வந்ததும் வராததுமாக முஸ்லீம்கள் தொடர்பான விஷயங்களில் சீண்டுதலை ஆரம்பித்துள்ளது. இதற்கு பாப்புலேஷன் ஆர்மி என்ற இந்த திட்டமும் ஒரு காரணம். இதன்படி 1000 பேர் கொண்ட குழு முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பல கட்ட பணிகள்

பல கட்ட பணிகள்

இந்த குழு, கருத்தடை சாதனங்களை மக்களிடையே வினியோகம் செய்யும். மக்கள் தொகை அதிகரிப்பு கூடாது என்று கூறி, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளது. இது தவிர ஆஷா என அழைக்கப்படும், அங்கீகரிக்கப்பட்ட சமூக ஆரோக்கிய பணியாளர்களை கொண்டும் மக்கள் தொகை பற்றி பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

முஸ்லீம் மக்கள் தொகை இலக்கு

முஸ்லீம் மக்கள் தொகை இலக்கு

இது தொடர்பாக சட்டசபையிலேயே அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர். "அசாமில் இந்துக்களிடையே மக்கள்தொகை வளர்ச்சி 2001 முதல் 2011 வரை 10 சதவீதமாக இருந்தால், அது முஸ்லிம்களிடையே 29 சதவீதமாக இருந்தது" என்று முதல்வர் கூறியுள்ளார்.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

அவர் மேலும் கூறுகையில் "குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தியதன் காரணமாக, அசாமில் இந்துக்களின் வாழ்க்கை முறை மேம்பட்டுள்ளது. சொந்தமாக பெரிய வீடுகள் மற்றும் வாகனங்கள் உள்ளன. இந்துக்களின் குழந்தைகள் மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்களாக மாறுகிறார்கள்." என்று முதல்வர் கூறியுள்ளார்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

"அதிக மக்கள் தொகையின் சுமை காரணமாக மேற்கு மற்றும் மத்திய அசாம் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் "அப்பர்" அசாம் மக்களுக்கு தெரியாது" என்றும் முதல்வர் கூறியுள்ளார். அதிக மக்கள் தொகை கொண்ட இந்த பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைக்கு விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+