பாலியல் புகார்: 'நோபல்' பச்சௌரியிடம் துருவித் துருவி கேள்வி கேட்ட போலீசார்
டெல்லி: அலுவலகத்தில் தன்னுடன் பணிபுரியும் 29 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டெல்லி போலீசார் பிரபல சுற்றுச்சூழல் நிபுணரான ஆர்.கே. பச்சௌரியிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.
எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தில் (டிஇஆர்ஐ) பணிபுரியும் 29 வயது பெண் ஒருவர் பிரபல சுற்றுச்சூழல் நிபுணரான ஆர்.கே. பச்சௌரி தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக டெல்லி போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி புகார் அளித்தார். தான் டிஇஆர்ஐ நிறுவனத்தில் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சேர்ந்ததில் இருந்தே பச்சௌரி தனக்கு தொல்லை கொடுத்து வந்ததாக அவர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

அவரது புகாரின்பேரில் போலீசார் பச்சௌரி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து பச்சௌரி ஐ.நா. பருவநிலை மாற்ற குழுவின்(ஐபிசிசி) தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். மேலும் டிஇஆர்ஐ நிறுவன தலைவரான அவர் காலவரையற்ற விடுப்பில் சென்றுள்ளார்.
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்று பச்சௌரி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டுக்கு சென்ற போலீஸ் குழுவினர் அவரிடம்
வழக்கு குறித்து விசாரணை நடத்தினர். போலீசார் அவரிடம் 50 கேள்விகள் கேட்டுள்ளனர்.
2007ம் ஆண்டு ஐபிசிசி அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. அந்த பரிசை ஐபிசிசி சார்பில் பெற்றவர் பச்சௌரி என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications