காந்தியை படுகொலை செய்தது ஆர்.எஸ்.எஸ்.தான்: வழக்கை தொடர்ந்து நடத்தவே விருப்பம் - ராகுல்
டெல்லி: மகாத்மா காந்தியை கொலை செய்தது ஆர்.எஸ். எஸ். தான் என்ற கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க மறுத்த ராகுல் காந்தி, அதுதொடர்பான வழக்கை தொடர்ந்து சந்திக்க விருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கூறினார்.
மஹாராஷ்டிர மாநிலம், சோனாலே நகரில் மார்ச் 6 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். மக்களே காந்தியை கொலை செய்தனர் என்றார். இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் அதன் நிர்வாகி ராஜேஷ் குந்தே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கு இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி பான்ட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையின் போது ராகுல் காந்தி தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தால் வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர்.
எனினும், ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்திருப்பதாக கபில் சிபல் கூறினார். மேலும், உள் நோக்கத்தோடும், தீய எண்ணத்தோடும் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார் கபில் சிபல்.
இதையடுத்து, நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு ராஜேஷ் குந்தேவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ராகுல் காந்தி ஏதேனும் பதில் வாக்குமூலம் தாக்கல் செய்ய விரும்பினால் நான்கு வாரத்துக்குள் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications