காந்தியை படுகொலை செய்தது ஆர்.எஸ்.எஸ்.தான்: வழக்கை தொடர்ந்து நடத்தவே விருப்பம் - ராகுல்
டெல்லி: மகாத்மா காந்தியை கொலை செய்தது ஆர்.எஸ். எஸ். தான் என்ற கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க மறுத்த ராகுல் காந்தி, அதுதொடர்பான வழக்கை தொடர்ந்து சந்திக்க விருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கூறினார்.
மஹாராஷ்டிர மாநிலம், சோனாலே நகரில் மார்ச் 6 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். மக்களே காந்தியை கொலை செய்தனர் என்றார். இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் அதன் நிர்வாகி ராஜேஷ் குந்தே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கு இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி பான்ட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையின் போது ராகுல் காந்தி தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தால் வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர்.
எனினும், ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்திருப்பதாக கபில் சிபல் கூறினார். மேலும், உள் நோக்கத்தோடும், தீய எண்ணத்தோடும் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார் கபில் சிபல்.
இதையடுத்து, நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு ராஜேஷ் குந்தேவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ராகுல் காந்தி ஏதேனும் பதில் வாக்குமூலம் தாக்கல் செய்ய விரும்பினால் நான்கு வாரத்துக்குள் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications