விபச்சார வழக்கில் ரஷ்மி நாயரை கைது செய்ததே தப்பாமே
திருவனந்தபுரம்: ஆள்கடத்தல் மற்றும் விபச்சார வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள, மாடல், ரஷ்மி நாயர் செய்தது தப்பு கிடையாது என கேரளாவில் பல முற்போக்கு ஆர்வலர்கள் குரல்கள் எழுப்ப தொடங்கியுள்ளனர்.
இந்த குரல்களை எழுப்புபவர்களில், ஒருவர்தான் பத்திரிகையாளரான லால் டேனி. இதுகுறித்து அவர் சில பாயிண்டுகளை முன்வைத்து பேஸ்புக்கில் கூறியுள்ளதாவது:
முதலில், ஒரு விஷயத்தை பார்க்க வேண்டும். இந்தியாவில் இருநபர்கள் ஈடுபடும் விபச்சாரம் என்பது குற்றம் கிடையாது.

குற்றமேயில்லை
இரு நபர் சம்மதத்தோடு உறவு கொள்வதை விபச்சாரம் என்று அழைக்க முடியாது. இதை ஒரு தொழிலாக மாற்றி மூன்றாவது நபர் நுழைந்திருந்தால்தான் அது விபச்சாரம் என்று அழைக்கப்படும். விபச்சார சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

10 ரூபாய்
இரு நபர்கள் உடலுறவு கொள்வதை, பொது இடத்தில் வைத்துக்கொண்டால்தான் அது குற்றச்செயல். அப்படியும், தற்போதுள்ள சட்டத்தில், கையும், களவுமாக பிடிபட்டால் 10 ரூபாய்தான் அபராதமாக விதிக்க முடியும்.

வாட்ஸ்அப்
விபச்சாரம் ஹோட்டலில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சம்பவம் நடந்தபோது ரஷ்மி நாயர் அங்கு இல்லை என ஆவணங்கள் கூறுகின்றன. வாட்ஸ்அப்பில் ஆபாச படங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. நாயர் ஒரு மாடல். அவர் ஆபாச கோலத்தில் கொடுத்த போஸ்களை அனுப்பி வைப்பது குற்றமாகாது.

பேஸ்புக்
ரஷ்மி நாயரும், அவரது கணவரும், சிறுமிகளின் நிர்வாண படங்களை போட்டு, பேஸ்புக் பக்கம் நடத்தியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அந்த பேஸ்புக் பக்கத்தை நடத்தியதற்காக, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், அதை லைக் செய்து பேஸ்புக் பக்கத்தின் ஃபாலோவர்களாக இருந்த ஆயிரக்கணக்கானோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கடத்தல்
இந்த வழக்கில் உருப்படியாக கூறப்படும் குற்றச்சாட்டு என்பது, சிறுமிகள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுவது மட்டுமே. ஆனால், கடத்தலுக்கு உள்ளானவர்கள் தரப்பில் இருந்து இதுவரை புகார் தரப்படவில்லை என்பதால், அதிலும் ஆட்டம் உள்ளது.

பழி தீர்ப்பு
ரஷ்மி நாயர் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி, இதற்கு முன்பும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். அவர் விசாரித்த பல வழக்குகள் ஜோடிக்கப்பட்டவையாக இருந்துள்ளன. 'கிஸ் ஆப் லவ்' போராட்டம் நடத்தியதால்தான், கலாச்சார காவலர்களுக்கு ரஷ்மி மீது கோபம் இருந்தது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் மீது பழி சுமத்தப்படுகிறது. இவ்வாறு நீள்கிறது அவரது பார்வை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications