சபரிமலை ஐயப்பன் கோயில் கொடிமரம் சேதம் சீரமைப்பு- திட்டமிட்டபடி கொடியேற்றம் என அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்க கொடிமரம் சேதம் சரிசெய்யப்பட்டதால் திட்டமிட்டபடி கொடியேற்றம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை : கேரள மாநிலம் சபரிமலையில் நிறுவப்பட்ட தங்க கொடிமரத்தின் அடி பகுதி சேதம் 3 மணி நேரத்திற்கு உழைப்பிற்குப் பின்னர் சரிசெய்யப்பட்டதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இங்குள்ள கோயில் கொடிமரம் சேதம் அடைந்ததையடுத்து திருவாங்கூர் தேவசம்போர்டு புதிய கொடிமரத்தை நிறுவ முடிவு செய்தது.
இதன்படி தேக்குமரத்தில் 40 உயரமுள்ள கொடிமரம் 9.16 கிலோ தங்கம், 300 கிலோ காப்பர், 17 கிலோ வெள்ளி கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த பிரம்மாண்ட கொடி மரம் நேற்று கோயிலில் நிறுவப்பட்டது. சுமார் ரூ.3.2 கோடி செலவில் புதிய கொடிமரம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொடிமரம் சேதம்
இந்நிலையில் நேற்று பிற்பகலில் அந்த கொடிமரத்தின் அடிப்பகுதி சேதமடைந்திருப்பதை பார்த்து நிர்வாகமும், பக்தர்களும் அதிர்ச்சியடைந்தனர். கொடிமரத்தின் அடிப்பகுதியில் உள்ள தங்கம் ரசாயனம் இல்லது பாதரசம் தெளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பாதரசம் வீச்சு?
பாதரசத்தில் தோய்யப்பட்ட துணியை யாரோ கொடிமரத்தின் கீழ்பகுதியில் வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறத. இது திட்டமிட்டே செய்யப்பட்டதா அல்லது கைதவறி விழுந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 பேரிடம் விசாரணை
இதனிடையே மர்ம நபர்கள் தங்க கொடிமரத்தின் மீது ஏதோ ரசாயனம் தெளிக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேதத்தின் பின்னணி என்ன?
எனினும் கொடிமரம் மதியம் வரை சேதப்படுத்தப்படாமல் இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சேதம் விஷமிகளின் செயலாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக அமைச்சர் கடகம்பல்லி சுரேந்திரன் கூறியுள்ளார். ஜுன் 28ம் தேதி ஐயப்பன் கோவில் நடை 10 நாள் திருவிழாவிற்காக திறந்துவிடப்பட்டு ஜூலை 7ம் தேதி ஆராட்டு விழாவோடு மீண்டும் நடை சாத்தப்பட உள்ளது. இந்நிலையில் கொடிமரம் சேதப்படுத்தப்பட்டிருப்பது பக்தர்களிடையே களக்கத்தை ஏற்படுத்தியது.

சேதம் சரிசெய்யப்பட்டது
இந்நிலையில் கொடிமரத்தின் அடிப்பகுதி சேதம் சரி செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருமலா அனந்தன் அச்சாரி தலைமையிலான குழுவினர் 3 மணி நேரம் போராடி கொடிமரத்தின் அடிப்பகுதியில் உள்ள பாதரசம் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பழைய பொலிவை கொடிமரம் பெற்றுள்ளதோடு திட்டமிட்டபடி நாளை மறுதினம் கொடியேற்றம் நடைபெறும் என்றும் தேவசம்போர்டு கூறியுள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications