மணல் குவாரிகளை மூடும் ஹைகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை!
6 மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை மூடும் ஹைகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
டெல்லி : தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என்று ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு செய்த மேல்முறையீட்டில் கட்டுமான பணிகள் பாதிக்கப்படவதால் தடையை நீக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மணல் தட்டுப்பாடு இருப்பதால் ராமையா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மணலை இறக்குமதி செய்து தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு எடுத்துச் செல்ல அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார்.

தமிழகத்தில் செயல்படும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும் என்ற உத்தரவையும் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது.
நீதிபதி கல்யாணசுந்தரம், தாரணி அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒரு நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு நீதிபதி மதன் பி. லோகூர், நீதிபதிகுப்தா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மணல் குவாரிகள் மூடல் உத்தரவால் வீடு கட்டும் கட்டுமானப்பணிகள் மற்றும் பொதுப்பணித்துறையின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் குவாரிகள் மூடல் அறிவிப்பால் பலர் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளதால் ஹைகோர்ட்டின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டது. இதனையேற்ற நீதிபதிகள் ஹைகோர்ட் அளித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளனர்.
ராமையா என்டர்பிரைசஸ்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்சநீதிமன்றம் 2 வாரத்தில் மணல் இறக்குமதி குறித்து பதிலளிக்குமாறு தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications