அமித்ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரண வழக்கு.. வாதம் முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு
டெல்லி: நீதிபதி லோயா மர்ம மரண வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா, 2014 டிசம்பர் 1ம் தேதி நாக்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, திடீரென மரணமடைந்தார். இவர், மரணத்திற்கு முன் விசாரித்துக் கொண்டிருந்தது குஜராத்தில் நடைபெற்ற சொரபுதீன் என்கவுன்டர் வழக்கு என்பதும், இந்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்ததும், லோயா மரணம் குறித்த சர்ச்சையை கிளப்பியது.

லோயா மரணம் குறித்து விசாரிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தஹ்ஸின் பூனாவாலா அணுகினார். மகாராஷ்ட்ராவை சேர்ந்த பத்திரிகையாளர் பந்தூ ராஜ் லோனே மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அவை இணைக்கப்பட்டு ஒரே மனுவாக விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு சார்பில் சீனியர் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினார். லோயா சாவில் மர்மம் இல்லை என்பது மகாராஷ்டிரா அரசின் வாதம்.
மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, வாதிடுகையில், லோயா மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட கூடாது. லோயாவுக்கு உடல்நல பிரச்சினை ஏற்பட்டபோது 4 நீதிபதிகள் அதே நிகழ்ச்சியில் உடன் இருந்தனர். அவர்களையும் நாம் சந்தேகப்படுவதுபோல ஆகிவிடும் என்பதால் விசாரணை தேவையில்லை. ஒரு மனிதருக்காக இந்தியாவின் மொத்த சிஸ்டமும் செயல்படுகிறது என்ற யூகங்களுக்கு நாம் இடம் கொடுப்பதற்கு பதில், பேசாமல் நீதித்துறையை இழுத்து மூடிவிட்டு போய்விடலாமே என்றார்.
இந்த நிலையில், லோயா வழக்கில் எந்த மாதிரியான தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுக்க எழுந்துள்ளது.
-
13 ஆண்டு கோமா.. 32 வயது இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி.. நாட்டிலேயே முதல் முறை -
ஓபிசி கிரீமிலேயர்.. பெற்றோரின் சம்பளத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
ஓபிசி கிரிமிலேயர் வருமான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி












Click it and Unblock the Notifications