அமித்ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரண வழக்கு.. வாதம் முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு
டெல்லி: நீதிபதி லோயா மர்ம மரண வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா, 2014 டிசம்பர் 1ம் தேதி நாக்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, திடீரென மரணமடைந்தார். இவர், மரணத்திற்கு முன் விசாரித்துக் கொண்டிருந்தது குஜராத்தில் நடைபெற்ற சொரபுதீன் என்கவுன்டர் வழக்கு என்பதும், இந்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்ததும், லோயா மரணம் குறித்த சர்ச்சையை கிளப்பியது.

லோயா மரணம் குறித்து விசாரிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தஹ்ஸின் பூனாவாலா அணுகினார். மகாராஷ்ட்ராவை சேர்ந்த பத்திரிகையாளர் பந்தூ ராஜ் லோனே மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அவை இணைக்கப்பட்டு ஒரே மனுவாக விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு சார்பில் சீனியர் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினார். லோயா சாவில் மர்மம் இல்லை என்பது மகாராஷ்டிரா அரசின் வாதம்.
மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, வாதிடுகையில், லோயா மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட கூடாது. லோயாவுக்கு உடல்நல பிரச்சினை ஏற்பட்டபோது 4 நீதிபதிகள் அதே நிகழ்ச்சியில் உடன் இருந்தனர். அவர்களையும் நாம் சந்தேகப்படுவதுபோல ஆகிவிடும் என்பதால் விசாரணை தேவையில்லை. ஒரு மனிதருக்காக இந்தியாவின் மொத்த சிஸ்டமும் செயல்படுகிறது என்ற யூகங்களுக்கு நாம் இடம் கொடுப்பதற்கு பதில், பேசாமல் நீதித்துறையை இழுத்து மூடிவிட்டு போய்விடலாமே என்றார்.
இந்த நிலையில், லோயா வழக்கில் எந்த மாதிரியான தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுக்க எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications