மறைந்திருந்தது ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி என தெரியாது: மெகபூபா !
ஸ்ரீநகர்: பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்த போது மறைந்திருந்தது புர்ஹான் வானி என்பது அவர்களுக்கு தெரியாது என காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் கடந்த 8-ம் தேதி பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதையடுத்து காஷ்மீரில் வன்முறை வெடித்தது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு இன்று வரை பல இடங்களில் அமலில் உள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் 50 பேருக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்த காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, அனந்த்நாக் மாவட்டம், கோகர்நாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக மட்டுமே ராணுவத்தினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கிடைத்ததாக அறிகிறேன்.
ஒருவேளை பயங்கரவாதி புர்ஹான் வானி அங்கு இருப்பது ஏற்கெனவே தெரிந்திருந்தால், இந்த அளவுக்கு வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுத்திருக்கலாம். ஆனால், புர்ஹான் வானி கொல்லப்பட்டது திடீரென்று தெரிய வந்ததால், அரசால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும், அந்தச் சூழலில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த முயற்சி செய்ததால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications