ஜெ. சொத்து குவிப்பு வழக்கை ஜூனியர் நீதிபதிகள் விசாரித்தது ஏன்? நீதிபதி செல்லமேஸ்வர் பகீர் புகார்
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு குறித்து மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஜூனியர் நீதிபதிகள் விசாரித்தது ஏன்? என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகள் போர்க்குரல் எழுப்பினர். இந்திய வரலாற்றிலேயே தலைமை நீதிபதிக்கு எதிராக இதுதான் முதல் முறை.

இதனால் தலைமை நீதிபதியை நீக்கும் இம்பீச்மென்ட் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. இந்த நிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நீதிபதி செல்லமேஸ்வர் கூறியதாவது:
உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக வழக்குகள் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக சந்தேகம் இருக்கிறது. ஏனெனில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை ஜூனியர் நீதிபதிகள்தான் விசாரித்தனர். இதற்கு நான் கடும் எதிர்ப்பும் தெரிவித்தேன்.
ஆனாலும் ஜூனியர் பெஞ்ச்தான் விசாரித்தது. அதுவும் ஜெயலலிதா இறந்த பிறகு தீர்ப்பு அளித்தது. இதனால் என்ன பயன்? விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் வழக்குகளை ஒதுக்கினால் நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மை பாதிக்கும்.
ஜூன் 22-ந் தேதி ஓய்வு பெற உள்ளேன். அதன் பின் அரசு தரும் எந்த ஒரு பதவியையும் ஏற்கப் போவது இல்லை. இவ்வாறு நீதிபதி செல்லமேஸ்வர் கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications