நாகரீக சமூகத்தில் பலாத்கார சம்பவம் நடப்பது வெட்கக் கேடானது: பிரதமர் மோடி ஆவேசம்
Recommended Video

டெல்லி: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாகரீக சமூகத்தில் பலாத்கார சம்பவம் நடப்பது வெட்கக் கேடானது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது காஷ்மீர், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நமது குழந்தைகளுக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாகரிகமான சமுதாயம் கொண்ட நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் வெட்கக் கேடானவை என்றும் மோடி ஆவேசமாக கூறியுள்ளார்.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் நாட்டிற்கு இதை நான் உறுதி அளிக்கிறேன் என்றும பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேச சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications