''நான்தான் வாவா சுரேஷ்..'' கண்விழித்து பேசிய பாம்புபிடி மன்னன்! ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டார்
கோட்டயம்: பாம்பு கடித்ததில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வாவா சுரேஷ் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். அந்தப் பகுதிகளில் வீட்டுப்பகுதிகளுக்கு வரும் விஷப்பாம்புகளைப் பிடிப்பதுதான் சுரேஷுக்கு வழக்கம். ராஜநாகம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்துள்ளார்.
வாவா சுரேஷ், பாம்பு பிடிப்பதற்கு எந்தவித உபகரணமும் இல்லாமல் வெறுங்கையால் பாம்புகளைப் பிடிப்பார் வாவா சுரேஷ். இவர் பாம்பு பிடிப்பதைப் பார்க்கவே மக்கள் கூட்டமாகக் கூடுவார்கள்.

வாவா சுரேஷ்
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி கோட்டயம், சங்கனாச்சேரி அருகில் இருக்கும் குறிச்சிப் பகுதியில் பாம்பு பிடிக்கச் சென்றார். 7 அடி நீளமுள்ள நாகப்பாம்பின் வாலைப் பிடித்து சாக்கில் அடைக்கும்போது, வாவா சுரேஷின் வலது தொடையில் பாம்பு கடித்தது. அப்படி இருந்தும், பாம்பைப் பிடித்து அடைத்துவிட்டு மயக்கமடைந்தார் வாவா சுரேஷ்.

மருத்துவமனை
இதையடுத்து அந்தப்பகுதி மக்கள் வாவா சுரேஷை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். வாவா சுரேஷுக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டதால் அவரை கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வாவா சுரேஷ் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக தகவல் வந்ததும், அவருக்காக நிறையபேர் பிரார்த்தனை நடத்தினார்கள்.

முன்னேற்றம்
இந்த நிலையில் வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று மதியம் வென்டிலேட்டரிலிருந்து மாற்றப்பட்ட நிலையில், சாதாரணமாகவே சுவாசம் செய்தார். இதையடுத்து அவர் ஆபத்தில் இருந்து மீண்டுவிட்டார் என்று மருத்துவமனை தெரிவித்தது. வாவா சுரேஷ் மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்விழிப்பு
இதையடுத்து வாவா சுரேஷிடம் மருத்துவர்கள் பேச்சு கொடுத்தனர். அவரின் பெயர் குறித்து கேள்விகேட்ட போது, 'நான் சுரேஷ், வாவா சுரேஷ்' என்று பதில் கொடுத்துள்ளார். அதேநேரம், பாம்பு கடித்தது பற்றி அவரிடம் எதுவும் கேட்கவில்லை. ஏனென்றால், மாரடைப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் இதுபோன்ற கேள்விகள் தவிர்க்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications