2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைந்து வருவதற்கு பின்னால் சதி: ம.பி. முதல்வர் சவுகான்
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைந்து வருவதற்கு பின்னால் எதோ சதி இருக்கிறது என்று ம.பி. முதல்வர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சாஜ்பூர் : பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை சந்தை புழக்கத்தில் இருந்து குறைந்து வருவதற்கு பின்னால் எதோ சதி இருப்பதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் அருகே உள்ள சாஜ்பூரில் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், மாநிலம் முழுவதும் விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், சில அரசியல் கட்சிகள் விவசாயிகளை அரசுக்கு எதிராக தூண்டி விட்டு செயல்படப்பார்க்கிறார்கள்.
விவசாயிகளுக்கு எந்தப் பிரச்னையாக இருந்தாலும், என் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக குறை தீர்ப்பு மையத்தை எந்த நேரம் வேண்டுமானாலும் அணுகலாம். இனியும் விவசாயிகள் பிரச்னையில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும், 2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 15 லட்சம் கோடியாக இருந்த பணப்புழக்கம், தற்சமயம் 16.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

ஆனால், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் சந்தை புழக்கத்தில் இருந்து குறைந்து வருகிறது. இதற்குப் பின்னால் எதோ சதி இருக்கிறது. யாரோ குறிப்பிட்ட சிலர் பணத்தை பதுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications