இனி பண்டிகை காலங்களில் டிக்கெட் கவலை இல்லை: 37 தடங்களில் ஏசி பிரீமியல் ரயில்
டெல்லி: இனி பண்டிகை காலங்களில் ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூற முடியாது ஏனெனில் 37 தடங்களில் குளுகுளு பிரீமியம் ரயில் ஓடப்போகிறது.

பண்டிகை காலங்களில் ரயிலில் டிக்கெட் கிடைப்பது பெரிய பாடாக இருக்கும். இனி ரயில் டிக்கெட் பற்றிய கவலையே வேண்டாம். காரணம் ரயில்வே துறை குளுகுளு பிரீமியம் ரயில்களை இயக்கவிருக்கிறது. இந்த ரயிலுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். கடந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டின் போது இந்த பிரீமியம் ரயில் டெல்லி-மும்பை இடையே இயக்கப்பட்டது.
3 அடுக்கு ஏசி ரயிலில் டிக்கெட் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வரையும், இரண்டு அடுக்கு ஏசியில் டிக்கெட் ஒன்றுக்கு ரூ.17 ஆ.யிரம் வரையும் கட்டணம் செலுத்த வேண்டும். ராஜ்தானி ரயிலை விட இந்த பிரீமியம் ரயில் கட்டணம் ஏழு மடங்கு அதிகம் ஆகும்.
பண்டிகை காலங்கள், கோடை விடுமுறையின்போது எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுத்து பயணிக்கும் நபர்களுக்காக தான் இந்த பிரீமியம் ரயில்கள். இந்த ரயில் கோவா, பிகானிர் உள்ளிட்ட 37 தடங்களில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து ரயில் வாரிய அதிகாரி பாண்டே கூறுகையில்,
ஆண்டு முழுவதும் காத்திருப்பு பட்டியல் உள்ள 37 தடங்களை கண்டறிந்துள்ளோம். அந்த தடங்களில் பிரீமியம் ரயில்களை இயக்க உள்ளோம். இந்த ரயில்களின் அடிப்படை கட்டணமே பிற ரயில்களின் தட்கல் டிக்கெட்டுக்கு சமமாக அல்லது அதிகமாக இருக்கும்.
இந்த ரயில்களால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பிற ரயில்களின் வருமானம் பாதிக்காது. இது அதிக பணம் கொடுத்து பயணம் செய்யும் நபர்களுக்காக தான் என்றார்.
பிரீமியம் ரயில்கள் மூலம் ரயில்வே துறைக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications