இனி பண்டிகை காலங்களில் டிக்கெட் கவலை இல்லை: 37 தடங்களில் ஏசி பிரீமியல் ரயில்
டெல்லி: இனி பண்டிகை காலங்களில் ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூற முடியாது ஏனெனில் 37 தடங்களில் குளுகுளு பிரீமியம் ரயில் ஓடப்போகிறது.

பண்டிகை காலங்களில் ரயிலில் டிக்கெட் கிடைப்பது பெரிய பாடாக இருக்கும். இனி ரயில் டிக்கெட் பற்றிய கவலையே வேண்டாம். காரணம் ரயில்வே துறை குளுகுளு பிரீமியம் ரயில்களை இயக்கவிருக்கிறது. இந்த ரயிலுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். கடந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டின் போது இந்த பிரீமியம் ரயில் டெல்லி-மும்பை இடையே இயக்கப்பட்டது.
3 அடுக்கு ஏசி ரயிலில் டிக்கெட் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வரையும், இரண்டு அடுக்கு ஏசியில் டிக்கெட் ஒன்றுக்கு ரூ.17 ஆ.யிரம் வரையும் கட்டணம் செலுத்த வேண்டும். ராஜ்தானி ரயிலை விட இந்த பிரீமியம் ரயில் கட்டணம் ஏழு மடங்கு அதிகம் ஆகும்.
பண்டிகை காலங்கள், கோடை விடுமுறையின்போது எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுத்து பயணிக்கும் நபர்களுக்காக தான் இந்த பிரீமியம் ரயில்கள். இந்த ரயில் கோவா, பிகானிர் உள்ளிட்ட 37 தடங்களில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து ரயில் வாரிய அதிகாரி பாண்டே கூறுகையில்,
ஆண்டு முழுவதும் காத்திருப்பு பட்டியல் உள்ள 37 தடங்களை கண்டறிந்துள்ளோம். அந்த தடங்களில் பிரீமியம் ரயில்களை இயக்க உள்ளோம். இந்த ரயில்களின் அடிப்படை கட்டணமே பிற ரயில்களின் தட்கல் டிக்கெட்டுக்கு சமமாக அல்லது அதிகமாக இருக்கும்.
இந்த ரயில்களால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பிற ரயில்களின் வருமானம் பாதிக்காது. இது அதிக பணம் கொடுத்து பயணம் செய்யும் நபர்களுக்காக தான் என்றார்.
பிரீமியம் ரயில்கள் மூலம் ரயில்வே துறைக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications