திலீப்புக்கு பகிரங்கமாக ஆதரவு அளிக்கும் கிரிக்கெட் வீரர்.. கழுவி ஊற்றும் மக்கள்
திருவனந்தபுரம்: மொத்த கேரளாவும் நடிகர் திலீப்பை வறுத்தெடுத்துக் கொண்டுள்ள சூழ்நிலையில், சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், அவருக்கு ஆதரவாக பேசி எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் பிக்சிங்கில் ஈடுபட்டவர்தான் ஸ்ரீசாந்த். கேரளாவை சேர்ந்த இவரால் அம்மாநில கிரிக்கெட் உலகத்திற்கே அப்போது தலைகுனிவு ஏற்பட்டது. 2013 முதல் இவர் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இதன்பிறகு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்ரீசாந்த், கடந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கூட்டு சேரும் ஆளை பாருங்க
இப்போது கேரள மாநிலமே திலீப்பை கழுவி, கழுவி ஊற்றிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஸ்ரீசாந்த்தோ, திலீப்புக்கு ஆதரவு குரல் எழுப்பியுள்ளார். ஏற்கனவே கேரள மானத்தை, சர்வதேச அரங்கில் கப்பலேற்றிய ஸ்ரீசாந்த், இப்போது இன்னொருவருக்கும் வக்காலத்து வாங்குகிறார் என திட்டி தீர்க்கிறார்கள், மலையாளிகள்.

சுய அனுதாபம்
ஸ்ரீசாந்த் கூறுகையில், மொத்த மக்களும் திலீப்புக்கு எதிராக கோபப்படுவது சரியில்லை என்றும், திலீப் இன்னும் குற்றம் நிரூபிக்கப்படாதவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது சொந்த அனுபவத்திலிருந்து இதை கூறுவதாக சுய அனுதாபமும் பட்டுக்கொண்டுள்ளார் அவர்.

எம்எல்ஏ ஆதரவு
இதனிடையே, எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் என்பவரும் திலீப்புக்கு ஆதரவாக கருத்து கூறி சமூக வலைத்தளங்களில் வறுபட்டுக்கொண்டுள்ளார். திலீப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என டிஜிபி டி.பி.சென்குமார் கூறிய ஒன்றரை நாட்களில் திலீப் கைது செய்யப்பட்டுள்ளாரே, என ஜார்ஜ் சந்தேகம் வெளிப்படுத்தியுள்ளார்.

பெண்கள் அமைப்பு கோபம்
கேரள மக்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், திலீப்புக்கு எதிரான வழக்கு ஜோடிக்கப்பட்டது என்றும் எம்எல்ஏ ஜார்ஜ் கூறியுள்ளார். இவரது கருத்து மக்களிடம் குறிப்பாக பெண்கள் அமைப்பினரிடம் கண்டனத்தை பெற்றுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications