வகுப்பில் செல்போனில் எஸ்.எம்.எஸ்... கண்டித்த ஆசிரியர்... தற்கொலை செய்து கொண்ட டெல்லி மாணவன்!
டெல்லி: டெல்லியில் பள்ளிக்கு செல்போன் கொண்டு வரக் கூடாது என்று ஆசிரியர் கண்டித்த காரணத்தினால் மாணவன் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லியில் உள்ள காஜிபூர் பகுதியைச் சேர்ந்தவர் தருண். இவர் அந்த பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை இவர் பள்ளிக் கூடத்துக்கு சென்ற போது செல்போன் கொண்டு சென்றிருந்தார். வகுப்பு அறையில் பாடம் நடந்து கொண்டிருந்த போது செல்போனில் யாருக்கோ எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டிருந்தார்.

கண்டித்த ஆசிரியர்:
இதை கவனித்த ஆசிரியர் அவனை அழைத்து கண்டித்தார். மேலும் இனி பள்ளிக்கு வரும் போது செல்போன் எடுத்து வரக்கூடாது என்று எச்சரித்தார்.

செல்போன் அனுமதி இல்லை:
அதோடு அந்த மாணவனிடம் இருந்து செல் போனையும் வாங்கி வைத்துக் கொண்டார். பெற்றோரை அழைத்து வந்தால் தான் செல்போனை திருப்பித்தருவேன் என்றும் ஆசிரியர் கூறி விட்டார்.

தூக்கு போட்டு தற்கொலை:
ஆசிரியர் உத்தரவால் மாணவர் தருண் மனம் உடைந்தார். சனிக்கிழமை மாலை வீடு திரும்பிய அவர் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்தார். அன்றிரவு அவர் தன் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை:
தற்கொலை செய்யும் முன்பு மாணவர் தருண் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். போலீசார் தருண் உடலை கைப்பற்றி வீட்டை சோதனையிட்ட போது அந்த கடிதம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications