வகுப்பில் செல்போனில் எஸ்.எம்.எஸ்... கண்டித்த ஆசிரியர்... தற்கொலை செய்து கொண்ட டெல்லி மாணவன்!
டெல்லி: டெல்லியில் பள்ளிக்கு செல்போன் கொண்டு வரக் கூடாது என்று ஆசிரியர் கண்டித்த காரணத்தினால் மாணவன் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லியில் உள்ள காஜிபூர் பகுதியைச் சேர்ந்தவர் தருண். இவர் அந்த பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை இவர் பள்ளிக் கூடத்துக்கு சென்ற போது செல்போன் கொண்டு சென்றிருந்தார். வகுப்பு அறையில் பாடம் நடந்து கொண்டிருந்த போது செல்போனில் யாருக்கோ எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டிருந்தார்.

கண்டித்த ஆசிரியர்:
இதை கவனித்த ஆசிரியர் அவனை அழைத்து கண்டித்தார். மேலும் இனி பள்ளிக்கு வரும் போது செல்போன் எடுத்து வரக்கூடாது என்று எச்சரித்தார்.

செல்போன் அனுமதி இல்லை:
அதோடு அந்த மாணவனிடம் இருந்து செல் போனையும் வாங்கி வைத்துக் கொண்டார். பெற்றோரை அழைத்து வந்தால் தான் செல்போனை திருப்பித்தருவேன் என்றும் ஆசிரியர் கூறி விட்டார்.

தூக்கு போட்டு தற்கொலை:
ஆசிரியர் உத்தரவால் மாணவர் தருண் மனம் உடைந்தார். சனிக்கிழமை மாலை வீடு திரும்பிய அவர் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்தார். அன்றிரவு அவர் தன் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை:
தற்கொலை செய்யும் முன்பு மாணவர் தருண் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். போலீசார் தருண் உடலை கைப்பற்றி வீட்டை சோதனையிட்ட போது அந்த கடிதம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications