நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது.. முன்னாள் அட்டர்னி ஜெனரல்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாக இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்று அவர்கள் குற்றம்சாட்டினர். உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது என்றும் அவர்கள் கூறினர்.

நீதிபதிகள் குற்றச்சாட்டு
இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது என்றும் தெரிவித்தனர். மேலும் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வது குறித்து நாடு சிந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் பரபரப்பு குற்றம்சாட்டினர்.

ஓய்வுபெற்ற நீதிபதிகள் கருத்து
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளின் குற்றச்சாட்டால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதிகள் தங்களுக்குள்ளேயே பிரச்சரனையை பேசி தீர்த்திருக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலைமை நீதிபதியிடம்..
இந்நிலையில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நீதிபதிகள் தலைமை நீதிபதியிடம் தான் சென்றிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏமாற்றம் அளிக்கிறது
நீதித்துறையில் பிளவு ஏற்படக்கூடாது என்றும் அவர் தெரிவத்தார். நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications