நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கு: அரசு வழக்கறிஞராக கோபால் சுப்பிரமணியம் பெயர் பரிசீலனை!
டெல்லி: நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் அரசுத் தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் பெயர் உச்ச நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டுவருகிறது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டுவருகிறது.
சொலிசிட்டர் ஜெனரலுடன் ஆலோசனை
இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா முன்னிலையில் நேற்று நடைபெற்ற ஆலோசனையில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கலந்துகொண்டார். இந்த வழக்கைக் கையாளுவதற்கு நேர்மையான, ஆழ்ந்த சட்ட ஞானமுள்ள வழக்கறிஞர் தேவை என தலைமை நீதிபதி அப்போது கூறினார்.
கோபால் சுப்பிரமணியம் பெயர்
சிறப்பு அரசு வழக்கறிஞர் பொறுப்புக்கு பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அப்போது கோபால் சுப்ரமணியத்தின் பெயரும் பரிசீலனைக்கு வந்தது. நாடாளுமன்றத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் அவர் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக வாதாடியுள்ளார் என சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
ஒப்புதல் தேவை
"சிறப்பு அரசு வழக்குரைஞராகப் பொறுப்பேற்க அவரது ஒப்புதல் தேவை. இதற்கு முன்பு என்னுடைய மற்றொரு முயற்சி தோல்வியில் முடிந்ததால், இந்தப் பொறுப்பை ஏற்குமாறு நீங்கள்தான் அவரை வற்புறுத்த வேண்டும் என தலைமை நீதிபதி லோதா அங்கிருந்த வழக்கறிஞர்களை நோக்கிக் கூறினார்.
நீதிபதிகள் நியமன விவகாரம்
முன்னாதாக, நீதிபதிகள் நியமனக் குழு, கோபால் சுப்ரமணியத்தின் பெயரை உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு அவரை நிராகரித்துவிட்டது.
பரிசீலனை
இதை மனதில் வைத்தே நீதிபதி லோதா தனது முந்தைய முயற்சியின் தோல்வி பற்றியும் சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் பற்றியும் குறிப்பிட்டார். சிறப்பு அரசு வழக்கறிஞர் பொறுப்புக்கு டெல்லி வழக்காடுவோர் பெயரை மட்டும் பரிசீலிக்கக் கூடாது என்றும் நீதிபதி லோதா குறிப்பிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications