ரயில்வே கண்டிப்பாக தனியார் மயமாக்கப்படாது – ரயில்வே அமைச்சர் சுரேஷ்பாபு!
டெல்லி: ரயில்வே கண்டிப்பாகத் தனியார் மயமாக்கப்படாது என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார். ரயில்வேயை தனியார் மயமாக்கலாம் என்று மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
அந்த பரிந்துரைப்படி எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கும் உரிமையும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ரயில்வே இலாகாவை தனியார் மயம் ஆக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், "நிதி ஆயோக் உறுப்பினர் பிபெக் டெப்ராய் தலைமையிலான குழு ரயில்வேயை தனியாருக்கு கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. ரயில்வேக்கு தனி பட்ஜெட் தேவை இல்லை என்றும் அந்த குழு கூறியுள்ளது.
ஆனால் இந்த பரிந்துரைகள் அனைத்தையும் ரயில்வே தொழிற்சங்கங்கள் நிராகரித்து விட்டன. டெப்ராய் குழு பரிந்துரைகளை ஏற்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளன. எனவே ரயில்வேயை தனியார் மயம் ஆக்கும் திட்டம் எதுவும் இல்லை.
ரயில்வேயை தனியாருக்கு கொடுக்க வேண்டும் என்ற கேள்வி ஏன் எழுந்தது என்று தெரியவில்லை. அதற்கான அவசியமே இல்லை. அது பற்றி நாங்கள் சிந்திக்கவும் இல்லை.
அதற்கு பதில் நாடெங்கும் ரயில் வேலையை சீர்திருத்தம் செய்து மேம்படுத்தும் முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். டெப்ராய் குழு பரிந்துரைகளை நாங்கள் இன்னும் படிக்கவில்லை. ரயில்வேக்கான திட்டங்கள் திட்டமிட்டபடி அமல்படுத்தப்பட்டு வருகிறது. ரயில்வேக்ககான நிதி ஆதாரத்தில் எந்த சிக்கலும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications