புதிய ஏர்லைன் துவங்கும் டாடா சன்ஸ்-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
டெல்லி: டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் புதிய விமான சேவையை துவங்குகிறது.
டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் சேர்ந்து இந்தியாவில் புதிய ஏர்லைன்ஸை நிறுவ உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அந்த இரண்டு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன.
இந்நிலையில் இந்த புதிய கூட்டு முயற்சி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

18 ஆண்டுகளுக்கு முன்பே
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பே டாடா குழுமமும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸும் சேர்ந்து தனியார் ஏர்லைன்ஸை நிறுவத் திட்டமிட்டன. ஆனால் அந்த திட்டம் பரண் மேல் போடப்பட்டது.

ரூ.620 கோடி
இந்த புதிய நிறுவனத்தில் டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேர்ந்து ரூ.620 கோடி முதலீடு செய்கின்றன.

டாடாவுக்கு
புதிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் டாடா சன்ஸுக்கு 51 சதவீத பங்கும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு 49 சதவீத பங்கும் இருக்கும்.

டெல்லியில்
புதிய ஏர்லைன்ஸ் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.

ஒப்புதல்
இந்த ஏர்லைன்ஸுக்கு ஒப்புதல் கோரி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு சபையிடம் விண்ணப்பித்துள்ளது.

போர்டு உறுப்பினர்கள்
புதிய நிறுவனத்தின் நிர்வாக அமைப்பில் முதலில் டாடா சன்ஸ் நியமிக்கும் 2 பேர் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

தலைவர்
டாடா சன்ஸால் நியமிக்கப்பட்ட பிரசாத் மேனன் புதிய ஏர்லைன்ஸின் சேர்மனாக இருப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்ஏசியா
இந்தியாவில் குறைந்த விலை விமான சேவை வழங்க டாடா குழுமம் ஏற்கனவே ஏர்ஏசியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விமான சேவை வரும் அக்டோபர் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications