புதிய ஏர்லைன் துவங்கும் டாடா சன்ஸ்-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
டெல்லி: டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் புதிய விமான சேவையை துவங்குகிறது.
டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் சேர்ந்து இந்தியாவில் புதிய ஏர்லைன்ஸை நிறுவ உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அந்த இரண்டு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன.
இந்நிலையில் இந்த புதிய கூட்டு முயற்சி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

18 ஆண்டுகளுக்கு முன்பே
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பே டாடா குழுமமும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸும் சேர்ந்து தனியார் ஏர்லைன்ஸை நிறுவத் திட்டமிட்டன. ஆனால் அந்த திட்டம் பரண் மேல் போடப்பட்டது.

ரூ.620 கோடி
இந்த புதிய நிறுவனத்தில் டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேர்ந்து ரூ.620 கோடி முதலீடு செய்கின்றன.

டாடாவுக்கு
புதிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் டாடா சன்ஸுக்கு 51 சதவீத பங்கும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு 49 சதவீத பங்கும் இருக்கும்.

டெல்லியில்
புதிய ஏர்லைன்ஸ் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.

ஒப்புதல்
இந்த ஏர்லைன்ஸுக்கு ஒப்புதல் கோரி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு சபையிடம் விண்ணப்பித்துள்ளது.

போர்டு உறுப்பினர்கள்
புதிய நிறுவனத்தின் நிர்வாக அமைப்பில் முதலில் டாடா சன்ஸ் நியமிக்கும் 2 பேர் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

தலைவர்
டாடா சன்ஸால் நியமிக்கப்பட்ட பிரசாத் மேனன் புதிய ஏர்லைன்ஸின் சேர்மனாக இருப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்ஏசியா
இந்தியாவில் குறைந்த விலை விமான சேவை வழங்க டாடா குழுமம் ஏற்கனவே ஏர்ஏசியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விமான சேவை வரும் அக்டோபர் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications