33% இந்தியர்களுக்கு ரத்த அழுத்த பாதிப்பு... ஒரு ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: இந்தியர்களில் 33 சதவீதம் பேர் அவர்களுக்குத் தெரியாமலேயே ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகி இருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
போதிய உடல் உழைப்பின்மை, ஊட்டச்சத்து இல்லாத சாப்பாடு என முந்தைய தலைமுறை மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையிலிருந்து விலகி தற்போதுள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதனால், சிறு வயதிலேயே பல்வேறு நோய்த்தாக்குதலுக்கு அவர்கள் ஆளாகின்றனர். ஆனால், இதில் மிகப்பெரிய கொடுமை பல நோய் குறித்த விழிப்புணர்வே அவர்களுக்கு இல்லாமல் இருப்பது தான்.
அந்தவகையில், 'கார்டியாலஜி சொசைட்டி ஆப் இந்தியா' என்ற அமைப்பு, நாடு முழுவதும் இளைஞர்களிடம் ஒரு ஆய்வை நடத்தியது. அதன் விபரமாவது:-

மோசமான வாழ்க்கை முறை...
இந்தியர்களில் 33 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்தம் உள்ளது. சிகரெட் புகைக்காத, மது அருந்தாத பலருக்கும் ரத்த அழுத்த நோய் வந்துள்ளது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதற்குக் காரணம் அவர்களது வாழ்க்கை முறை தான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாஸ்ட் புட் மோகம்...
தற்போது பலர், பாஸ்ட் புட் உணவுகளையே அதிகம் உட்கொள்கின்றனர். எனவே, இத்தகையவர்களுக்கே நோய் பாதிப்பு அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இரவுநேரப் பணி...
அதோடு, ஐ.டி., துறையில் இரவு பணிக்கு செல்பவர்கள் நேரம் கெட்ட நேரத்தில் அதிக உணவை உண்பதாலும் இதுபோல் உடல் உபாதைகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர்.

வேலைப்பளு...
வேலை காரணமாக பலர் வீட்டில் உணவு தயாரிக்காமல் கிடைக்கும் உணவைச் சாப்பிட்டு இரவில் கண்விழித்து வேலை பார்க்கின்றனர். இதனால், உடலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

மன அழுத்தம்...
மேலும், இது குறித்து ஆய்வை நடத்திய கார்டியாலஜி சொசைட்டி ஆய்வாளர்கள் கூறுகையில், "ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டோரில் மூன்றில் 2 பங்கு பேருக்கு, அந்த நோய் வந்ததே தெரியவில்லை. பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தமும் பலருக்கு இந்நோய் தாக்கியதற்கு காரணம்.

வாழ்க்கைமுறை...
இவர்கள் வாழ்க்கை முறையை மாற்றியே ஆக வேண்டும். 'பாஸ்ட் புட்' உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மனதை லேசாக வைத்துக்கொள்ள வேண்டும்.

சைலண்ட் கில்லர்...
ஏனெனில், ரத்த அழுத்தம் என்பது ஒரு 'சைலன்ட் கில்லர்'. ரத்த அழுத்த நோய் வந்தவர்களை இதய நோய் எளிதாக தாக்கும் அபாயம் உள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

சிறு வயதிலேயே உஷாராகுங்கள்...
சிறு வயதிலிருந்தே இதில் தீவிர கவனம் செலுத்தச் சொல்கிறார்கள் டாக்டர்கள். சிறார்கள் இன்று வீட்டிலேயே முடங்கியுள்ளனர். டிவி, செல்போன், கேம்ஸ், நொறுக்குத் தீனி என்று மூழ்கிப் போயுள்ளனர். இதிலிருந்து அவர்களை மீட்டாக வேண்டும் என்பது டாக்டர்களின் அறிவுரையாகும்.
வைத்தியருக்குத் தருவதை வாணிபருக்குக் கொடு என தெரியாமலா நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications