கர்நாடகா தேர்தல் கருத்து கணிப்பு: 35 ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சி மீது அதிருப்தி இல்லை
கர்நாடகா தேர்தல் கருத்து கணிப்பில் 35 ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை.
பெங்களூர்: கர்நாடகா தேர்தல் கருத்து கணிப்பில் 35 ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை என்பதையே கருத்துகணிப்புகள் காட்டுகின்றன.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக , காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் போட்டிப் போட்டிக் கொண்டு தங்கள் நிறைகள் குறித்தும் எதிர்க்கட்சிகளின் குறைகள் குறித்தும் வெளிப்படுத்தினர்.
மொத்தம் 222 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கு வரும் 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதுதான் மரபு
பொதுவாக பெரும்பாலான மாநிலங்களில் ஆளும் கட்சி மீது மக்களுக்கு ஏதேனும் அதிருப்தி நிலவும். அதனால் அடுத்து வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு பதிலாக எதிர்க்கட்சிக்கே மக்கள் வாக்களித்து ஆட்சி அமைக்க வழிகோலுவர். இதுதான் மரபு.

கலைப்பு
1983-ஆம் ஆண்டு ஜனதா கட்சியை சேர்ந்த ராமகிருஷ்ணா ஹெட்ஜே ஆட்சி செய்தார். அதன் பின்னர் எஸ் ஆர் பொம்மை ஆட்சி நடைபெற்றது. இதையடுத்து ஜனாதிபதி ஆட்சி நடந்ததால் அப்போதைய ஆட்சி கலைக்கப்பட்டது.

மாற்றம் ஏற்பட்டது
1989-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீரேந்திர பாட்டீல் ஆட்சி நடைபெற்றது. அதன்பிறகும் ஜனாதிபதி ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி என ஆட்சி நடைபெற்றது. கடந்த 1994-ஆம் ஆண்டு ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்றது. அதன்பிறகு, மதசார்பற்ற ஜனதா தளம், பாஜக என மாறி மாறி ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

எக்சிட் போல் மற்றும் ப்ரீ போல்
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளிலும் சரி பிந்தைய கருத்து கணிப்புகளிலும் சரி காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையை பெறாவிட்டாலும் பெரும்பான்மையை பெரும் என்றே கணிக்கப்பட்டன. அது போல் காங்கிரஸ் கட்சிக்கு 70 முதல் 90 இடங்கள் கிடைக்கும் என்று சராசரியாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

35 ஆண்டுகள் கழித்து...
இது ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை என்பதையே காட்டுகிறது. சித்தராமையா அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையவில்லை என்பதையும் காட்டுவதாக கருத்து கணிப்புகள் அமைந்துள்ளன. சுமார் 35 ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சிக்கு மக்கள் ஓரளவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
-
Karnataka Budget 2026 LIVE: கர்நாடகாவில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை? சித்தராமையா தகவல் -
பறக்கும் பெங்களூர் மெட்ரோ... டார்கெட் "இதுதான்.." சித்தராமையா சொன்ன மிக முக்கிய தகவல் -
மேகதாது அணை.. உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் மனு தள்ளுபடியை வெற்றி என கொண்டாடிய சித்தராமையா! -
உலக தரத்திற்கு மாறும் பெங்களூர்! உட்கட்டமைப்பு வசதிகளில் பெரிய சேஞ்ச்! வெளியான முக்கிய அறிவிப்பு! -
கர்நாடகாவை தொடர்ந்து.. ஆந்திராவிலும் சிறுவர்கள் சோஷியல் மீடியாக்களை பயன்படுத்த தடை! அதிரடி அறிவிப்பு -
அடுத்த பாண்டிச்சேரியாக மாறும் பெங்களூர்! பீர் விலை அப்படியே குறையுது.. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு -
மாமியார்- நாத்தனார் தலையில் முட்டும் மருமகள்கள்.. கர்நாடகாவில் வினோத திருவிழா.. சுவாரசிய பின்னணி -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம்












Click it and Unblock the Notifications