செத்தாலும் சாவேனே தவிர, சொந்த மக்களை கேவலமாக பேசமாட்டேன்.. தருண் விஜய் நீலிக் கண்ணீர்!
டெல்லி: நான் செத்தாலும் சாவேனே தவிர எனது சொந்த மக்களை அசிங்கமாக பேச மாட்டேன் என பாஜக எம்.பி. தருண் விஜய் தெரிவித்துள்ளார்.
கென்ய நாட்டை சேர்ந்த இளைஞர் இந்தியாவில் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அளித்த பேட்டியொன்றில், இந்தியர்கள் நிறவெறி கொண்டவர்கள் கிடையாது. இத்தாக்குதல் அதற்காக நடந்திருக்காது என தருண் விஜய் விளக்கம் அளித்தார்.
அப்போது இந்தியாவில் பல்வேறு நிறம் கொண்ட மக்கள் வாழ்கிறோம். தென் இந்தியாவில் கறுப்பு நிறம் அதிகம். அதற்காக நாங்கள் விரோதம் பாராட்டவில்லையே என்று தனது பேச்சுக்கு நியாயம் சேர்த்தார்.

கண்டனம்
ஆனால் இவ்வாறு பேசியது தென் இந்தியர்களை கறுப்பினர்ததவர்களோடு ஒப்பிடுவதை போல உள்ளது என்று தென் இந்தியாவை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

கேவலப்படுத்த மாட்டேன்
ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தருண் விஜய், நான் செத்தாலும் சாவேனே தவிர, எனது நாட்டின் சொந்த கலாசாரம், சொந்த மக்களையும், சொந்த நாட்டையும் பற்றி குறைவாக பேச மாட்டேன். எனது பேச்சை தப்பாக சித்தரிக்கும் முன்பாக கொஞ்சம் யோசியுங்கள். எனது பேச்சு புண்படுத்திவிட்டதாக நினைப்பவர்களுக்கு எனது மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனவெறிக்கு எதிரான இந்தியா
நாங்கள் இனவெறிக்கு எதிராக போராடியுள்ளோம், எங்களிடம் பல்வேறு கலாசாரம், வண்ணம் கொண்ட மக்கள் உள்ளனர். ஆனால் இந்தியாவில் இனவெறி என்பது கிடையாது. எல்லோரும் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்றுதான் நான் பேட்டியில் தெரிவித்தேன். இவ்வாறு தருண் விஜய் தெரிவித்துள்ளார்.

செக்கச் செவப்பு
இதனிடையே திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், எங்கள் தலைவர் கருணாநிதி கறுப்பு கிடையாது, மறைந்த ஜெயலலிதா கலரானவர். தென் இந்தியாவின் அனைத்து மக்களும் கறுப்பு கிடையாது என தெரிவித்தார்.

அந்த கண்ணனே கார்மேக வண்ணன்தான்
சோஷியல் மீடியா பிரபலம் கே.எஸ். கிரண் வெளியிட்டுள்ள கருத்தில், பகவான் கிருஷ்ணர் கறுமை நிறமானவர். அவரை அழகன் என புராணங்கள் புகழ்கின்றன. நானும் கறுப்பு நிறம் கொண்ட தென் இந்தியன் என்பதில் பெருமைதான். இதுதான் எனது இயல்பான நிறம். ஆயிரமாயிரம் வருடங்களாக இந்த மண்ணில் வாழும் எனது மூதாதையர்களின் வண்ணம்தான் எனக்குள்ளது என்று தெரிவித்தார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications